Tuesday, August 28, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 28/08/12


கொல்லான் பொய்கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கள்காமம்
இல்லான் இயமத்து இடைநின்றானே.

பொருள் : ஓருயிரைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், திருடாதவனும், ஆராய்ச்சியுடையவனும், நல்லவனும், பணிவுடையவனும், நீதி வழுவாதவனும், பகிர்ந்து கொடுத்து உண்பவனும், குற்றமில்லாதவனும், கள்ளும் காமமும் இல்லாதவனுமாகிய தன்மை உடையவனே இயமஒழுக்கங்களில் நிற்பவன் ஆவான்.