Wednesday, July 31, 2013

மூட்டு வலிக்கு இயற்கை மருத்துவம்


மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும் போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.


உடல் பருமன் அடைவது போல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள். (நெல்லி, வெண்ப+சனி, கொள்ளு சூப், சாப்பிட வலி குறையும்) நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும் முடக்கற்றானும் சரி செய்யும்.


முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை, வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று பிட்ய+ட்டரி சுரப்பிகள் சிறப்பாக இயங்கச் செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதானலும் நரம்புகள் பிடிப்பும், தசை இறுக்கம் மிகுவதாலும் வேர்வை சுரப்பிகள், தோல் சுருங்குவதாலும் மூட்டுக்களின் தரையில் வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவதாகும் உண்டாகிறது.


பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் இரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும். கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை கீரைச் சாறுகள். முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம். வாயுப் பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க ப+ண்டு சூப், வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.


மூட்டுவலி பெருக சில காரணி உணவுகள்:

அதிய அளவு காபி, டீ அருந்துதல்

அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்

கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல்

வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்

அசைவ உணவு

மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை

பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.

மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்ய+ட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு.


எளிய தீர்வுகள்
மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.

தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.

தினமும் மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.

இரவு நேர மண்ப+ச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.

எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.

வெள்ளைப+ண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.

வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம், பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.

காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.

உணவும்-உடலும்





உணவு, நீர், காற்று, பூமியிலிருந்து கதிர்யக்கம், கோள்களலிருந்து வான்காந்தம்.
இந்த நான்கி உணவின் மூலம் அதிக அளவில் உயிர்த்துகள்களையும் இறைத்துகள் எனும் சீலகாந்தத்தையும் பெறுகிறோம். எனவே உயிர் வாழ்க்கைக்கு உணவும் நீரும் மிக அவசியமாகின்றன.
இந்த நான்கில் ஒவ்வொன்றுக்கும் அடர்த்தி நிலை வேறுபடும்.


அறிவுக்கும், உடலுக்கும் உகந்த விகிதத்திலே இவை ஈர்க்கப்பட வேண்டும். உணவை மாத்திரம் எப்போதும் நிரப்பி வைத்து விட்டால், மற்ற மூன்று வகையில் இருந்து வருவதைத் தடுத்து விடுகிறோம். அப்படித் தடுத்து விடுவதால் சில குறைபாடுகள் உண்டாகின்றன.

பசித்துப் புசி:

அடுத்த முறை உணவு உண்ணுவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே பசி இருக்க வேண்டும். அதுதான் உணவில் அளவுமுறை. அவ்வாறு பசி இருந்தால் அந்த நேரத்தில் வயிற்ல் உணவு இல்லாததால், உணவிலிருந்து சீவகாந்த ஆற்றலைப் பெற முடியவில்லை. அதனால் உடல் தானாகவே காற்றிலிருந்து, கோள்களின் அலை வீச்சிலிருந்து, பூமியின் கதிரியக்கத்திலிருந்து சீலகாந்த ஆற்றலை எடுத்துக் கொள்ள முடிகிறது.

அப்பொழுதுதான் அறிவுக்கு விருந்தாக, சிந்தனைக்கு ஏற்ற விருந்தாக நல்ல ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. இந்த வான்காந்த அலைகள் உணவிலிருந்து வரக்கூடிய ஆற்றலை விட தூய்மையானதாக இருக்கும் என்று ஞானியர்கள் உணர்ந்து விளக்கியுள்ளார்கள்.

இதையே தான் "பசித்துப் புசி" என்று முன்னோர்கள் சொன்னார்கள். அரை வயிறு உணவு, கால் வயிற நீர்ப் பொருள், கால் வயிறு வெறும் வயிறு என்றும் சொல்லியுள்ளார்கள்.

உணவு உண்ணும்போது அரைவயிறு உணவும், கால் வயிறு நீர்ப்பொருளும் கொள்ளுதலே நல்லது. மீதமுள்ள கால்வயிறு அளவு வெற்றிடமாக இருப்பதே சிறந்ததாகம். இதனால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உயிருக்கேற்ற ஆற்றலாக மாற வாய்ப்பு அதிகரிக்கும். வயிறு கொள்ளும் அறவு முழுமையாக உணவை நிரப்பி விட்டால் உணவு முழுமையாகச் சீரணிக்க முடியாது. சத்துப்பொருட்களும் முழுமையாகப் பிரிக்கப்பட்டு உடலாற்றலாக மாற்றுவதும் பாதிக்கப்படுகிறது.

வயிறு எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்பது தவறான எண்ணம். இப்பழக்கத்தினால் உணவு கொஞ்சம் குறைந்து விட்டாலும், ஏதோ இழந்து விட்ட மாதிரி இருக்கும். உணவைப் போட்டு நிரப்பி விட்டுத் தவிக்கின்ற வரைக்கும் மனம் நிறைவு அடையாது. இப்பழக்கத்தை மாற்ற வேண்டும்.

புலால் உணவு

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷிக்கு சிறுவயது முதலே மாமிச உணவு உட்கொள்ளும் பழக்கம் பிடிக்காமல் இருந்தது. ஆயினும், குடும்பத்தில் அப்பழக்கம் இருந்ததால் அதை அடியோடு விட முடியவில்லை. ஒருமுறை மகாபலிபுரத்திற்குத் திருவிழாவிற்காகத் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். திருவிழாவில் ஒரு புத்தகக் கடை இருந்தது. அதில் இருந்த "புலால் உணவின் கேடுகள்" என்ற சித்தர் புத்தகம் அவரது கண்ணில் பட்டது. அதை ஒன்றே காலனா (8 புதிய பைசா) கொடுத்து வாங்கினார். உடனே அதைப் படிக்கத் தொடங்கினார். அதில் அவரது உள்ளத்தை நெகிழ வைத்த ஒரு கவி.

"அம்மா வெனவலற ஆருயிரைக் கொன்றருந்தி
இம்மானிட ரெல்லாம் இன்புற் றிருக்கின்றார்
அம்மாவெனும் ஓசை கேட்டகன்ற மாதவர்க்கும்
பொய்ம்மா நரகமெனில் புசித்தவர்க்கென் சொல்லுவதே!.

மாபெரும் தவசியாயினும், ஓர் ஆடு அல்லது மாடு தன்னைப் பிறர் கொல்லும்போது வெளியிடும் "அம்மா" எனும் ஓசையைக் கேட்டு விட்டால், அதை அக்கொடுந்துன்பத்திலிருந்து விடுவிக்காமல், அவ்விடத்தை விட்டு அகன்று போனால் அவருக்கு பயங்கரமான நரகம் கிட்டும். அப்படியென்றால் அக்கொலைச் செயல் மூலம் கிடைத்த புலாலை உண்டவர்கள் எத்தகைய பாவத்துக்கு உள்ளாவர்கள்? என்பதே இந்தக் கவியின் கருத்து.

அதுவரையில் தெரியாமல் மாமிச உணவு உண்டு ஏற்றுக் கொண்ட பாவங்களை மன்னிக்கும்படி வேண்டினார். கண்ணீர் விட்டு அழுதார். அன்று புலால் உண்ணா நோன்பை ஏற்றார். இதைப் படித்தவுடன் நீங்களும் மாற வேண்டும் என்றில்லை. ஆனால், இதைப்பற்றி முழுமையாக தெரிந்து மாறவில்லையென்றால் அது துன்ப வாழ்வையே தரும்.

வறுமை

அருட்தந்தை வேதாத்திரி சிறுவயது முதலே வறுமையில் வாடி வளர்ந்தவர். வறுமையால் அவர் குடும்பம் பட்ட கஷ்டம் சொல்லில் அடங்காது. பிற்காலத்தில் நன்கு முன்னேறிய நிலையில் அலுவலகத்திற்கு செல்ல பேருந்திற்காக மந்தைவெளி தபால் ஆபிசிற்கு எதிரில் நின்றிருந்தார். அப்போது செருப்பு அறுந்துவிட்டது. எப்போதாகிலும் அவரது செருப்பு அறுந்துவிட்டால் அங்கு ஒரு சக்கிலி இருப்பார் அவர்தான் தைத்து தருவார். அன்றும் அதே மாதிரி செருப்பைத் தைக்கக் கொடுத்தார். அவன் தைத்துக் கொண்டிருந்தான். அவன் வயிறு ஒட்டியிருந்தது.

'ஏனப்பா' காலையில் நீ ஒன்றும் சாப்பிடவில்லையா? எனக் கேட்டார். இல்லை என்று சொன்ன அவன் "நேற்றிரவு கூட சாப்பாடு கிடையாது சாமி" என்றான். பின் அவனுக்கு அறையனாவுக்கு பதில் ஒர் அணாவை அவனுக்கு கொடுத்து விட்டு சென்றார். "நேற்றிரவு கூட சாப்பாடு கிடையாது சாமி" என்னும் சொல் மகரிஷியின் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. பட்டினியின் கொடுமையை பற்றி சிந்தித்தார். உலக மக்களில் இதுபோல் எத்தனை பேர் பட்டினி கிடக்கிறார்கள். இந்த நிலை எப்படி மாற்ற முடியும்? வறுமை ஒழிய என்ன செய்ய வேண்டும் என சிந்தித்தார்? இதனால் 23 வயதிலிருந்து இரவு உணவைச் சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்.

சான்றோர்களே!
,
அது மகானுக்கு சாத்தியம். நமக்கு.

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம்!

மாதவிடாய் பிரச்னைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்தும்!

இன்றைய பரபரப்பான உலகத்தில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. உடல் பிரச்னைகள், மனதை பாதிப்பதும், மன அழுத்தம் உடல் நிலையை பாதிப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது. உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்னை. இது எதனால் ஏற்படுகிறது, இந்தப் பிரச்னையை யோகா மூலம் எப்படித் தீர்ப்பது என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறவர் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் ஹிமேஸ்வரி.

இன்றைய பெண்களின் வேலை பெரும்பாலும் உட்கார்ந்தே செய்ய வேண்டிய வேலையாகவே இருக்கிறது. வேலைக்குப் போகும் பெண்களில் அதிகமானோர் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. இதேபோல் வீட்டில் இருக்கும் பெண்களும் பெரும்பாலும், டி.வி. முன்னால்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். இதனால் உடல் தசைகளின் இயக்கம் குறைந்து விடுகிறது.

தவிர, நம்மில் பலர் பசியைத் தணிக்கவோ, அல்லது போரடிக்கிறது என்றோ ‘ஜங்க் ஃபுட்ஸ்’ என்கிற ரெடிமேட் வகை உணவுகைள சாப்பிடப் பழகிவிட்டார்கள். முன் காலத்தில் இடுப்புச் சதைகளுக்கு வலிவு தரும். உளுந்து சேர்ந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டார்கள். தற்போதோ இடுப்பிலும், உடம்பிலும் தசை போடும் இனிப்பு, ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்ற வறுத்த, பொரித்த உணவுகள் தான். இதனால் இடுப்புப் பகுதியிலும், கர்ப்பப்பையிலும் கொழுப்பு தேங்கி விடுகிறது. இதைக் கரைப்பதற்கென்று நாம் தனியாக எந்த வேலையையும் செய்வதில்லை.

முன்பு ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றில் இடுப்பை அசைத்துச் செய்யும் வேலைகள் அதிகமாக இருந்தது. இப்போதோ அந்த வேலைகளை, சுவிட்சைத் தட்டிவிட்டால், கிரைண்டர், மிக்ஸி போன்ற சாதனங்கள் செய்து விடுகிறதே! இதனால் சத்துக்கள் எல்லாம் இடுப்பில் தேங்கிவிடுகிறது. இதேபோல் சினைப்பையில் தேங்கும் நீர், கொழுப்பு காரணமாக நீர் கட்டிகள், கொழுப்பு கட்டிகள் உருவாகிறது. இதனால் ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, மாதவிடாய் பிரச்னைகள் வருகின்றன.

இன்னொரு விஷயமும் தெரியுமா? நாம் அழுகையை அடக்கும் போது டென்ஷன் அதிகமாகி, இடுப்புப் பகுதி தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. இந்த இறுக்கம் கர்பப்பையை பாதிக்கிறது. இதைத்தான் மருத்துவ ரீதியாக when we don’t cry. the uterus will cry என்று சொல்வதுண்டு.

சரி, காரணம் தெரிந்து விட்டது. இந்த பிரச்னைகள் வராமல் தடுக்கவும், வந்தால் சரி செய்யவும் என்ன செய்ய வேண்டும்?

இடுப்புப் பகுதியில், இருக்கும் சக்கரத்திற்குப் பெயர் ‘ஸ்வாதிஷ்டானம்’. இந்த சக்கர சக்திதான், இடுப்புப் பகுதியின் இயக்கத்தையும் மனவலிமையையும் சீராக வைக்கிறது.

ஸ்வாதிஷ்டான சக்கர சக்தியை பலப்படுத்தும், மர்ஜரியாசனம், புஜங்காசனம், தனுராசனம், அர்த்தசலபாசனம், பச்சி மோத்தாசனம் போன்ற யோகாசனங்கள் இடுப்புப் பகுதியைச் சீராக இயக்க வைத்து கர்ப்பப்பையை பலப்படுத்துகின்றன. அடி வயிற்றில் உள்ள கொழுப்பு கரையவும் உதவுகின்றன!.

இந்த ஆசனங்களை முதலில் 10 முறை செய்யவேண்டும். ஆனால், ஒரு பயிற்சி பெற்ற ஆசிரியரின் மேற்பார்வையில்தான் செய்யவேண்டும்.

இதற்கான உணவு முறை என்ன?

தினமும், ஏதாவது ஒரு வேளை, சமைத்த உணவிற்கு பதிலாக நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால், ஸ்வாதிஷ்டானத்தில் சக்தி அதிகமாகும். இந்த சக்கரம், நீர் ஆதாரத்தைக் கொண்டதால் நீர்ச்சத்து சேரும் போது சக்தி அதிகரிக்கிறது. நார்ச்சத்தோ, கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.

வாரத்தில் இரண்டு நாளாவது உளுந்து மாவு சேர்ந்த (புளிக்காத) உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் நேரங்களில் உளுந்துக் களியை தினமும் சாப்பிடலாம். இந்த உளுந்து உணவுகள், எலும்பை பலப்படுத்தும். அதே சமயத்தில் வாயு, மற்றும் எண்ணெய், சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

பச்சிமோத்தாசனம் : படத்தில் உள்ளது போல் முகத்தை, முழங்காலில் பதித்து, மூச்சை மெதுவாக இழுத்து, அடிவயிற்றிலும், பின்புற தசைகளிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

அர்த்த சலபாசனம் : குப்புறப் படுத்து, காலை உயர்த்தி, பக்கவாட்டில் கைகளை நீட்டி, வயிறு, இடுப்பு, இதயம் இவைகளில் மூச்சு சீராகச் சென்று வருவதை கவனிக்க வேண்டும்.

புஜங்காசனம் : குப்புறப் படுத்து, கைகளைத் தரையில் ஊன்றி, உடலையும், தலையையும் நிமிர்த்தி, முதுகுத் தண்டு ரிலாக்ஸ் ஆவதை உணர்ந்து கவனத்தைச் செலுத்த வேண்டும்.

தனுர் ஆசனம் : குப்புறப் படுத்து, கால்களை படத்தில் உள்ளது போல் செய்து மூச்சை மெதுவாக இழுத்து, வயிற்றிலும் முதுகிலும் தசை விரிவடைவதை கவனிக்க வேண்டும்.

மர்ஜரியாசனம்: முட்டிபோட்டு, இரண்டு கைகளையும்
தரையில் ஊன்றி மூச்சை கவனித்து முதுகுத் தண்டில்,
இடுப்புப் பகுதியில் கவனத்தைச் செலுத்த வேண்டும்

ஏமக்குறைவு நோய் (எய்ட்ஸ்) பற்றிச் சித்த மருத்துவம்


ஏமக்குறைவு நோய் (எய்ட்ஸ்) இன்று உலகத்தை அச்சுறுத்தி வரும் ஒரு நோயாகும். இந்நோயானது பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது. மிகவும் முதன்மையான காரணம், நோயுற்ற பெண்களுடன் உடலுறவு கொள்ளுதல் ஆகும். ஊசிகளைத் தூய்மைப்படுத்தாமல் பயன்படுத்துதல், இரத்தம் செலுத்துதல் முதலியனவும் இதற்குரிய காரணங்களாகும். இந்நோய்க்கான மருத்துவம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சித்த மருத்துவ நூல்களில் மேகநோயின் குறி குணங்களில் பல ஏமக் குறைவு நோயின் தன்மைகளை ஓத்துள்ளன. பரங்கியர்களான போர்ச்சுக்கீசியர்கள், 1460-இல் கடல் வழி கண்டனர். அவர்களால் இந்நோய் இந்திய நாட்டில் பரவியதாக வரலாறு கூறுகின்றது. எனவேதான் மேக நோய் - 'பிர மேகம்' என்றும், பரங்கிநோய், வெள்ளை நோய் என்றும் அழைக்கப்பட்டது. தொன்மையான தமிழ் மருத்துவ நூல்களில் மேகம் என்ற சொல்லாட்சியானது, சர்க்கரை நோயைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. சர்க்கரை நோயிலிருந்து வேறுபடுத்தி அறிய, பாலியல் நோய்களான வெள்ளை, வெட்டைக் கிராந்தி போன்றவைகளுக்கு "பிர மேகம்" எனப் பெயரிட்டழைத்தார்கள்.

மேக நோயைப்பற்றி விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் 'திரிபுவன சிங்கதேவன்' என்ற அரசு அலுவலன் இந்நோயால் வருந்தியதாகக் கடத்தூர், கோவை மாவட்டக் கல்வெட்டுக் கூறுகின்றது. சங்க காலம் முதல் மேலை நாட்டவர்களுடன் தமிழர்களுக்குத் தொடர்பு இருந்துள்ளது. மேக நோயைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் எங்கும் கூறுப்படவில்லை. எனவே சங்க காலத்தில் மேக நோய் இல்லை என அறியலாம்.

மேலை நாடுகளிலும் மேக நோய் வரலாறு சரிவர இல்லை. 'கொலம்பஸ்' மூலமாக இந்நோய் மேலை நாடுகளுக்குப் பரவியதாக வரலாறு கூறுகின்றது. மேக நோயைப் போன்றே ஏமக் குறைவு நோயின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவாக இல்லை. 1981-ஆம் ஆண்டு இந்நோய் மேலை நாடுகளில் கண்டறியப்பட்டது.1 பின்னர் 1985-ஆம் ஆண்டு இந்தியாவில் முதன்முதலாக ஏமக்குறைவு நோயாளி கண்டறியப்பட்டார்.2
இந்நோய் தோன்றுவதற்கு ஹெச்.ஐ.வி. வைரஸ் என்ற நுண் நச்சுயிரி காரணமாகும். இது இருவகையான இயல்பைப் பொறுத்து அமைகின்றது. இந்நோயினர் நல்ல உடல் நலத்துடன் உள்ளவர்கள் போன்று இருப்பார்கள். எறத்தாழ 10 ஆண்டுகள் சென்ற பின்னர், இந்நோயின் குறி குணங்கள் தெரிய வரும். இதன் முக்கியமான அறிகுறிகளாவன.3

கழுத்தில் நெறி கட்டும். பின்னர்ச் žழ் வைத்துச் சிவந்து காணும்.
நாவில் வெண்மையான படை படருதல்.
உட்புற மேல்வாய், தொண்டையில் மாவு போல் படரும், இதனால் நோயாளி உணவை உண்ண இயலாது.
உடல் இளைத்து வருதல்.
வயதான சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் போன்று ஏமக்குறைவு நோயில் உடலில் வருவது.
அக்கி என்ற கட்டிகள் தோன்றுதல்.
மூளையானது சுருங்குதல்.
இவை தவிர வேறு சில கடுமையான தொற்று நோய்களான (நிமோனியா) நுரையீரல் சுரம், காசம், கடுமையான கழிச்சல் என்பன ஏற்படும்.4 நுரையீரல் அழற்சியும் மூளைக்கட்டிகளும் தோன்றும்.5

சித்த மருத்துவத்தில் கூறப்பட்ட பிரமேக நோயின் சில குறிகுணங்கள், ஏமக் குறைவு நோயுடன் ஒத்துள்ளன. 'அகத்தியரின் பாண்டு வைப்பு 600' என்ற நூலில் பிரமேக நோயின் தன்மைகள் கூறப்பட்டுள்ளன.

"தாபம் மிஞ்சி, அஸ்திக்குள் இரத்தம் வற்றி தசைவற்றி, சுக்கிலமும் தண்­ராகி மோகமிஞ்சி சஞ்சரித்தால் கடுப்பு எரிவு தோன்றும்"6

மேக நோயால், உடலில் சூடு ஏற்பட்டு, எலும்பில் உள்ள இரத்தம் குறையும்; தசையானது சுருங்கும்; உடலில் வலி, எரிச்சல் உண்டாகும்; விந்து தண்­ர் போல் நீர்த்து விடும்; தசையானது சுருங்கும்; சாதாரணமாக உடல் எடையில் 10% அதிகமாக ஏமக் குறைவு நோயாளிகளிடம் ஏற்படும். கட்டிகள் ஏற்படும் என்பதையும் கூறுகின்றார்.

"காயாகிக் கட்டியாய் முளை யுண்டாகி
கனமாக இரணமாகிக் காயமெல்லாம்
பேசுமென்ற சரீரத்தில் தினவுண்டாகிப்
புழுக்கள் தான் ஊர்தல் போலப் புகைமாகும்".

காலிபிளவர் போலப் பலவித அடுக்குகளைக் கொண்டு இருக்கும் கட்டிகள், முளைகள் தோன்றும். உடலில் புண்கள் ஏற்படும்.

அகத்தியர் குணவாகடம் என்ற நூலில் பிரமேகம் பற்றிய பகுதி உள்ளது. இதில் 1079 முதல் 1112 வரையில் உள்ள பாடல்களில் குறி குணங்கள் கூறுப்படுகின்றன.

"விரணமுடன் žயுடனே இரத்தம் காணும்
கரடு தட்டி நோவுடனே கடுப்புக் கண்டு
கனமான சரீரந்தான் வெதும்பலாமே" (பாடல் 1112)

இரணத்தில் žழ், இரத்தம் என்பன இருக்கும். தோலில் காப்புக் காய்த்துக் காணப்படும். இதில் வலி, எரிச்சல் இருக்கும். உடலில் சூடு தோன்றும்.

"தன்வந்திரி வைத்திய காவியம் 1000"7 என்ற சித்த மருத்துவ நூலில் பிரமிய நோயை மிக விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

"சரீரந்தான் மிக வற்றி இயக்க முண்டால்
சந்தோடு கை கால் நோவுண்டாகும்
சரீரந்தான் கறுத்துமே எரிவுண்டாகும்"

உடல் மெலிந்து, கைகால்களை அசைத்தால், மூட்டுகளில் வலி, உடலில் எரிச்சல் என்பன ஏற்படும்.

"பேசு மென்ற சரீரத்தில் தினவுண்டாகி
புழுக்கள் ஊர்தல் போல் புகைமாகும்
மாசுடனே நீர் இறங்கி ரோகந்தானும்
மானிடரைக் கொல்லுமென வகுக்லாகும்".

தோல் நோய்கள் ஏற்படும். புழுக்கள் ஊர்வது போல அரிப்பு எடுக்கும்.

"தானாகச் சட மெங்கும் கட்டியாகித்
தரிக்காமல் வலியுண்டாய் தளர்ச்சிக் கேடாய்".

உடலில் கட்டிகள் ஏற்பட்டு, வலிதோன்றும்; உடல் வன்மை இழந்து; தளர்ச்சி தோன்றும்.

"வன்மையுடன் உடம்பெல்லாம் வலியுண்டாகும்
வாயது வாந்தியொடு மயக்கமாதல்".
"ஆண்மையாம் அடி வயிறு புண்போல் நொந்து
அடித்தண்டு விருதுத்து உச்சம் காணும்".

உண்ட உணவு செரிக்காமை, வாந்தியாதல், மயக்கம் ஏற்படும். அடி வயிற்றில் புண்கள் ஏற்படு, வயிற்றில் வலி தோன்றும்.
"தரித்திரம் போல் அன்னத்தைப் புசிக்க விடாது
சஞ்சலமாய் மனமது தான் தரிக்கூடாது"

குடலிலும், வாயிலும் புண்கள் ஏற்படுவதால், ஏமக் குறைவு நோயாளிகள் உணவு உட்கொள்ள முடியாத நிலையைப் போன்றே மேக நோயிலும் ஏற்படும் என்பதை முன்னுள்ள அடிகள் சுட்டும். சில ஏமக் குறைவு நோயாளிகளிடத்தில் மன நோயும் ஏற்படுதல் உண்டு.8 இதில் மனச்சிதைவு, உணர்ச்சிப் பிறர்வு போன்ற தீவிரமான குறிகுணங்களும் முதல் சாதாரணமான மன நோய் வரை பலவிதமான மன நோய்கள் வரலாம்.

"உடம்பெங்குந்தான் நாவிலே
உணர்ச்சி யில்லா உரிசை போகும்"

இதில் உணர்ச்சிகள் இல்லாத ஒரு நிலை ஏற்படும். நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் இது ஏற்படும். பெரிப்ரல் நீரோபதி என்று இது அழைக்கப்படும். மூளைக்கு மற்றப் பகுதிகளிலிருந்து உணர்வுகளைக் கொண்டு செல்லும் நரம்புகளைத் தாக்குவதால் இது ஏற்படும். நரம்பு மண்டலத்தின் செயல்களைக் கூறும் அடிகள் :

"விருதான விறுவிறுப்பாம் வலியுண்டாகும்
விசையான நரம் பெல்லாம் சுருக்கமாகும்."

"கூறான நரம்புக்குத்தங்கு பாய்ந்தான்
குத்தியே அடிக்கடி வலியுண்டாகும்."

நரம்புகளில் சுருங்குதல், நரம்புகளில் அடிக்கடி வலி என்பன ஏற்படும்.

"வாலிலிட்டால் கைப் புளிப்பு

தேறாது தேகமடா என்னக் கொண்டும்

தீயிலிட்ட மட்டையைப் போல் கரிந்த வாடும்."

இதில் இந்நோய் கண்டவருக்கு உணவு உண்ணக் கசக்கும்; புளிக்கும்; உடலானது தீயிலிட்ட மட்டையைப் போல் தேறாது.

"நன்றாச்சு அரோசியங்கள் வேர்வை தாகம்

சிரசு முதல் அபானன் வரை வெந்து"

பாடல் 330-இல் கூறப்படுகின்றது. இரவு நேரங்களில் ஏமக் குறைவு நோயினருக்கு வியர்வை சுரக்கும். அதிகக் களைப்பு, நீண்ட நாள் நிணக்கணு வீக்கம் என்பனவும் இருக்கும். பித்த மேகத்தில் வியர்வை தாகம் என்பன தோன்றும் என்று அகத்தியர் பாண்டு வைப்பு 600 கூறுகின்றது. மேக நோயின் துணை நோய்களையும் எடுத்துரைக்கின்றது. (பாடல் 332)

"அளிக்குமப்பா என்புருக்கி வெட்டை சாய்க்கும்
ஆகாகா தரை உருக்கி, இரத்தம் சாய்க்கும்
களிக்குமப்பா உள்ளிருற்று வெந்து வெந்து
கடை கெட்ட நோய்களெல்லாம் வருகும்
பலிக்குமைய்யா காசம் செள்ளைத் தடிப்பு வட்டம்
பாழான புண்களும்பன் கைகள் கால்கள்
கெளிக்குமப்பா சரீரமெல்லாம் குறுகிப் போகும்
நேரான சுக்கிலமும் தீப் போலமே."9

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஏமக்குறைவு நோயில் காச நோய் தொடர்பு நோயாக வரும்.10 மேக நோயிலும் இத்தகைய குறி குணங்களைக் காணலாம். என்புருக்கி என்ற சொல்லாட்சி காசநோயைக் குறிக்கும். மேக நோயாளியின் எடை குறையும். இரத்த சோகை நோய் ஏற்படும்.

"அக்குலமே அன்னத்தால் சமைந்த தேகம்
அது வெறுத்தால் சுயமெட்டும் வரும்பார்." (பாடல் 333)

இதுவும் காசநோய் வருவதைக் குறிக்கும். உணவு உட்கொள்ள இயலாத நிலை ஏற்படும். "அன்னமும்தான் வெறுத்து வரும் ஆசை போகும்" "அன்னத்தால்-சமைந்ததேகம் அசனத்தை வெறுக்கும் பார்" என்ற அடிகள் உணவு உட்கொள்ளாத நிலையைக் குறிக்கும். "உணவு செரிமானத் தடம் பாதிக்கப்படும். இதனால் செரிமானக் கோளாறுகள், குடல் மற்றும் இரைப்பை இயக்கங்களில் தவறுகள், உணவு உட்கிரகிப்பில் குறைபாடுகள், வாந்தி, பேதி, வயிற்று வலி போன்றவை ஏற்பட ஏதுவாகிறது."11

"கருதிவரும் கரப்பனு-சிரங்குவகை கேளு
கபாலத்தில் வரு மேகக் கரப்பான் இரண்டு
வருதி வாய் கரப்பான் என்ற சொறி சிரங்குண்டு
வளர்பித்த விடநீரால் எடுத்த சொரி மூன்று

பருதி என்ற குறைகுட்டம் கிரந்திப் புண்கள்
பார் கிருமி சூலை பீசத்தின் மூன்றே."12

"பீச முதல் பாத வரை சிசு மட்டும்
பிரிவிரியாய் நாமத்தை குடலெம்பு கூடும்.

விட நீரால் தொடர்கிராணி
வகை வகையாய் துளைத்து மீளும்."13

இதில் தொடர்ந்து பேதி காணும். இவ்வகையான பேதியானது எவ்வகையான மருந்துகளுக்கும் கட்டுப்படாத நிலையில் இருக்கும். இதையே தொடர் கிராணி என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. உடலுறவு மூலம் பரவுவதால் மேக நோயை விடநீர் என வகைப்படுத்துகின்றார். உடலின் தலை முதல் கால்கள் வரை இது பாதிக்கும். மேக நோயின் துணை நோயாகத் தலையில் கட்டிகள் தோன்றும். சுரம், தலைவலி, கழுத்து வன்மை, அக்கி என்பனவும் காச நோய் நுண்மி"14 என்பன ஏம நோயின் துணை நோய்காளகும்.

ஏமக் குறைப்பு நோயின் குறி குணங்கள் யாவும் சித்த மருத்துவ நூல்களில் காணப்படும் பிரமேக நோய்குக்கு இணையாக உள்ளன என்பதை அறியலாம்.

துணை நூல்கள் :

ஏமக்குறைவு நோய் - எய்ட்ஸ் - தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் - 1993.
ஏமக் குறைவு நோய் - எய்ட்ஸ்.பக்கம் 22, 1993.
எய்ட்ஸ் எரிமலை - மரு. ஜெயா. ஸ்ரீதர். பக்கம் : 147,
விகடன் வெளியீடு, 1994.
எய்ட்ஸ் - மரு.எம்.கே. முருகானந்தன், பக்கம் 22, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், ஜனசக்தி அச்சகம் - 1991.
ஏமக் குறைவு நோய் - பக்கம் 46, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், 1993.
அகத்தியர் வைத்திய காண்டம் - பாண்டு வைப்பு 600 -
பக்கம் 67, சென்னை வித்யா ரத்னாகர அச்சுக் கூடம் - 1935.
தன்வந்திரி வைத்திய காவியம் 1000 - சாரதி புத்தக சாலை, 1934.
ஏமக் குறைவு நோய் - பக்கம் 102, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்.
ஏமக் குறைவு நோய் - பக்கம் 44, எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம்.
ஏமக்குறைவு நோய் - பக்கம் 47, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.
ஏமக்குறைவு நோய் - பக்கம் 48, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்.
அகத்தியர் வைத்திய காண்டம் 600 - பாடல் 588.
அகத்தியர் பாண்டு வைப்பு - பாட்டு 589, வித்தியாரத்னாகர அச்சுக்கூடம், 1935.
ஏமக்குறைவு நோய் - பக்கம் 44, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்.

தினம் ஒரு திருமந்திரம் 31-07-2013

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே

பொருள் : சீவ சங்கற்பங்களைவிட்டு மூலக் கனலோடு மேற்சென்று சிற்பத் திறம் நிறைந்த இப்புவனங்களை யெல்லாம் படைத்துக் கொடுத்த பேரொளி அழகனாகிய பரமசிவத்தை, தேடி மதி மண்டலத்தோடு பொருந்தி, தான் என்றும் சிவமென்றும் பேதமாகாதது, சாந்தம் பொருந்திய சமாதியாகும். (தற்பரமாதல் என்பது ஆன்வா பேதமற்றுச் சிவத்தோடு நிற்றல்)

Monday, July 29, 2013

தினம் ஒரு திருமந்திரம் 29-07-2013

சித்தம் திரிந்து சிவமய மாகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

பொருள் : சித்தம் புறத்தே செல்லாமல் மாறுபட்டுச் சிவமாகி, வீடு பேற்றை ஆராய்ந்து அடைந்த பிரணவ உபாசகர் சிவத் தோடு கூடிய முத்தர்கள் ஆவார்கள். அவர் பஞ்சேந்திரியங்களின் தொடர்பில்லாதவர்கள். ஆகையால் அகத் தூய்மை பெறலாம். அவர்கள் அறிவு ஆகாயத்தில் தத்துவங்களை விட்டுச் சிவத்துடன் பொருந்திநிற்ப

Wednesday, July 24, 2013

தினம் ஒரு திருமந்திரம் 24-07-2013


நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடுஒன்றி னால்வாயாச் சித்தியே தத்தின்
நீடும் துரம்கேட்டல் நீண்முடிவு ஈராறே.

பொருள் : நம்முடைய உறவினர் சூழ இருப்பின் நம்மை நாடுவது பந்தமாகும். மிக்க கலை ஞானம், நுண்ணறிவு, நிறையறிவு ஆகிய இவற்றால் அட்டமாசித்திகள் அடையா. பேதமாகப் பெருகிய ஒலியினைப் பன்னிரண்டு கேட்டாலே சித்தியைத் தருமாம். (நீண்முடிவுஈராறு - யோகாப்பியாச காலம் பன்னிரண்டு வருடங்கள்.)

Saturday, July 20, 2013

சூரிய சந்திர கிரகணம் - விஞ்ஞான ஆன்மீக விளக்கங்கள்





சந்திர கிரகணத்தின் விவரணப் படம்



சூரிய கிரகணத்தின் விவரணம் படம்

கிரகணம் என்பது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் சுழன்று (வலம் வந்து) கொண்டிருக்கின்றன. அவற்றுள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமியும் ஒன்று. இவற்றுள் நட்சத்திரங்கள் தானாக ஒளிர்வன. மற்றையவை தானாக ஒளிர்வதில்லை. ஆனால் நட்சத்திரங்களின் ஒளியைப் பெற்று மற்றையவை ஒளிர்வன போல் பிரகாசிக்கின்றன.



ஒளிரும் ஒரு பொருளை பார்க்கும் ஒருவருக்கு இடையில் இன்னொரு ஒளிராப் பொருள் நகரும்போது ஒளிரும் பொருளின் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ மறைக்கப்பெறுகின்றது. இது அப்பொருளின் பிரமாணத்தையும், அப்பொருள் ஊடறுத்து நகரும் தூரத்தையும் பொறுத்து அமையும்.

அதுபோல் ஒளிரும் ஒரு பொருளின் ஒளிபெற்று பிரகாசிக்கும் ஒரு பொருளுக்கிடையே இன்னொரு பொருள் நகரும்போது ஒளிக் கற்றைகள் தடுக்கப்பெறுவதால் பிரகாசிக்கும் பொருள் முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஒளிபெறாது மறைக்கப்பெறுகின்றது. இதுவும் அப்பொருளின் பிரமாணத்தையும், அப்பொருள் ஊடறுத்து நகரும் தூரத்தையும் பொறுத்து அமையும்.


கிரகணம் எவ்வாறு நிகழ்கின்றது?
நாம் வாழும் பூமியானது ஆலயத்தைச் சுற்றி நாம் பிரதட்டை செய்வதுபோல் பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. பூமி தன்னைத் தானே சுற்ற ஒரு நாளும் சூரியனை ஒருமுறை சுற்ற ஒரு வருடமும் ஆகின்றது, பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இராப் பகல் தோன்றுகின்றது. சூரியனைச் சுற்றுவதால் பூமியில் பருவ காலங்கள் தோன்றுகின்றன.


அத்துடன் பூமியின் உப கிரகமான சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியையும் சுற்றி வருவதுடன் பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றிவருகின்றது. சந்திரன் பூமியச் சுற்றுவதனால் பூமியில் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகள் தோன்றுகின்றன.


இவ்வாறு சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது 29 1/2 நாட்களுக்கு ஒருமுறை பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயும், சூரியனுக்கு எதிர் திசையிலும் வருகின்றது. அதனால் பூமியில் இருப்போருக்கு (சந்திரனில் சூரிய ஒளி விழாது) இருட்டாகஅமாவாசையாகவும் சூரிய ஒளிவெளிச்சம் பெற்று பிரகாசமாக பௌர்ணமியாகவும் சந்திரன் தோற்றமளிக்கின்றது. இதற்கான காரணம் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் குறித்த தினங்களில் ஒரே நேர் கோட்டில் வருவதே.


பௌர்ணமி தினத்தில் பிரகாசமாக தோற்மளிக்க வேண்டிய சந்திரன் சில சமயங்களில் பூமியின் நிழலால் மறைக்கப்பட்டும், அமாவாசை தினத்தில் சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டும் விடுகின்றது. இவ் நிகழ்வையே சந்திர, சூரிய கிரகணம் என்று அழைக்கின்றோம்.


சந்திரன் பூமியைச் சுற்றும் போது ஒழுங்கான வட்டப் பாதையில் சுற்றாது நீள் வட்டப் பாதையில் சுற்றுவதனால் சந்திரன் ஒரு காலப் பகுதியில் பூமிக்கு மிக அண்மையாகவும், வேறு காலங்களில் பூமிக்கு சேய்மையாகவும் அமைந்து விடுகின்றது. இதேபோல் பூமியும் நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றுவதால் பூமியும் சூரியனில் இருந்து வித்தியாசமான தூரங்களில் அமைந்து சுற்றி வருகின்றது. இது இயற்கையின் நியதி.


அனைத்து கோள்களும் சற்றே சாய்ந்த நிலையில் அதாவது பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்தும். சூரியன் தன் அச்சில் 7 பாகை சாய்வாகவும் சுற்றுகிறது. சந்திரனும் கூட 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது.


இந்த காலகதியில் பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவது, ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அப்படி அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, ஏதாவது ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுதான் கிரகணம்என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் நிகழ்கின்றது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை.


மேலும் விளக்கமாக கூறுவதாயின்; இது ஒரு வானவியல் நிகழ்வு. வானில் பல பொருட்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவை நகர்ந்து செல்லும்போது சில சமயம் ஒன்றின் பாதையில் மற்றொன்று குறுக்கிட நேரிடலாம். அப்போது எமக்கு தெரிந்த அந்த வான்பொருள் நம் பார்வையிலிருந்து மறைக்கப்படும்.


இந்நிகழ்வு, சூரிய குடும்பத்துக்குள் நிகழும்போது இடையே வந்த வான் பொருளின் நிழல் மற்றைய வான் பொருளை ஒரு குக்கப்பெற்ற நேரத்திற்கு முழுமையாகவோ அல்லது பகுதியாக மறைத்து விடும். இந் நிகழ்வானது மறைக்கப்பெற்ற வான் பொருளின் பெயரை வைத்து, அதன் கிரகணம் என்று சொல்லப்படுகிறது. கிரகணம் என்பது சமஸ்கிருத சொல். இதனை நாம் சூரிய மறைப்பு, சந்திர/நிலா மறைப்பு என்றும் சொல்லலாம்.


பூமி தன் துணைக்கேளான சந்திரனுடன் இணைந்து கொண்டே சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை 29 1/2 தினத்தில் சுற்றுகிறது. அது மட்டுமல்ல சூரியனும் கூட தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை (Milky Way galaxy) தனது குடும்ப உறுப்பினர்களான கோள்கள், துணைக் கோள்கள், குள்ளக் கோள்கள், குயிப்பர் வளையம், ஊர்ட் மேகம், மற்றும் வால் மீன்கள் என தனது அனைத்தும் படை சூழ நொடிக்கு சுமார் 250 - 270 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகிறது. இந்த நிகழ்வு முடிய சுமார் 22.5 கோடி ஆண்டுகள் ஆகும். இதுவே ஒரு பிரபஞ்ச ஆண்டு என்றும் சொல்லப்படுகிறது.


அத்துடன் நாம் வாழும் சூரிய குடும்பம், பால்வழி மண்டலத்தில் ஒரு மணல் துகள் போன்று அமைந்துள்ளமையால் பால்வழி மண்டலத்தை 22 1/2 கோடி ஆண்டுகளில் ஒரு சுற்று சுற்றி முடிக்கிறது.


சந்திரன் தன் அச்சில் 5 பாகை சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோடில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே எல்லா முழு நிலா நாளிலும் கிரகணம் ஏற்படுவதில்லை. அது போல் எல்லா அமாவாசை தினத்திலும் சூரிய கிரகணமும் உருவாவதில்லை.


சூரியனுடன் ஒப்பிடும்போது சந்திரன் மிகச் சிறியது. அதன் விட்டம் 384,400 கி. மீ. மட்டுமே. இதில் சூரியன் சந்திரனைவிட 400 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். சூரியன் அளவில் பெரியதானாலும் தூரத்தில் இருப்பதனாலும்; சந்திரன் அளவில் சிறிதானாலும் கிட்டிய தூரத்தில் இருருப்பதனாலுமே பூமியிலிருந்து நாம் பார்க்கும்போது சூரியனிம், சந்திரனும் கிட்டத்தட்ட ஒரே அளவினதாக தென்படுகின்றன. மிகப் பெரிய சூரியனை மறைத்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான்.


பொதுவாக ஒரு வருடத்தில் 2 - 5 சூரிய கிரகணமும், அதிகபட்சமாக 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். சில சமயம். ஒரு சந்திர கிரகணம் கூட ஏற்படாமலும் போகலாம். ஆனால், ஒரு வருடத்தில் அதிகபட்சம் 7 கிரகணங்கள் தான் வரும். இதில் 4 சூரிய கிரகணமாகவும் 3 சந்திர கிரகணமாகவும் இருக்கலாம். முழு சூரிய கிரகணத்தின் மிக நீண்ட நேரம் என்பது 7.5 நிடங்கள் மட்டுமே.


எப்போதும் வட தென் துருவங்களில் பகுதி சூரிய கிரகணமே தெரியும் நில நடுக்கோட்டு (மத்திய தரைக்கோட்டிற்கு) அருகே கிரகணம் நிகழும் போதுதான் முழு சூரிய/ சந்திர கிரகணம் உண்டாகிறது. ஒரே மாதிரியான சூரிய கிரகண நிகழ்வுகள் (நேரம், வகை போன்றவை) 18 வருடம், 11 நாட்கள் (6,585.32 நாட்கள்) நிகழும் இதற்கு சாரோஸ் சுழற்சி என்று பெயர்.


பொதுவாக, கிரகணம் சூரிய உதயத்தில் தொடங்கி பூமியின் ஏதாவது ஒரு பாதியில் சூரியன் மறையும் போது முடிவடைகிறது. ஒரு வருடத்தில் பூமியில், எங்காவது இரு இடங்களில் கட்டாயம் சூரிய கிரகணம் நிகழும் இந்த கிரகணத்தில், கிரகண நிழலின் வேகம் 1,770 கி.மீ/ மணி நில நடுக்கோட்டுக்கு அருகில் ஆனால் துருவங்களில் கிரகண வேகம் பொதுவாக 8,046 கி. மீ/ மணி. முழு சூரிய கிரகணம் 1.5 வருடங்களுக்கு ஒருமுறை வருகிறது. சூரிய கிரகண பாதையின் அகலம் 269 கி. மீ. பகுதி சூரிய கிரகணம் பூமியின் மற்ற இடங்களுக்கு முழு கிரகண பாதை தாண்டி 4,828 கி. மீ. தூரம் வரை தெரியும்.


பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள் வட்டத்தில் சுற்றுவதால், சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால் அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும். எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.


கிரகணத்தின்போது அதன் நிழல் விழும் பகுதியின் கறுப்பு மற்றும் கருமை குறைவான பகுதிகளை முறையே, அம்பரா (Umbra), பெனும்பரா (Penumbera) என்று சொல்கின்றனர். சூரிய ஒளியே படாத பகுதி அம்பரா. சூரிய கதிர்சிதறல் படும் பகுதி பெனும்பரா. சூரிய உதயம்/ மறையும் சமயத்தில், சந்திர கிரகணத்தைப் பார்க்க நேரிட்டால், சூரியன், சந்திரன் இரண்டும் எதிரெதிர் திசையில் அற்புதமாய் தெரியும்.


அரிதான மிக இருண்ட சந்திர கிரகணம்..!
இந்த ஆண்டு ஜூன் 15 ஆம் நாள் ஏற்பட்ட முழு சந்திர கிரகணம் ஓர் அரிதான நிகழ்வு! ஏனெனில் இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் மைய நிழலை ஒட்டி பயணித்தது. இது போலவே ஒரு முழு சந்திர கிரகணம் கி. பி. 2000 ஆண்டு, ஜுலை 16ல் உண்டானது. இனி இதனை ஒத்த முழு சந்திர கிரகணம் கி. பி. 2018, ஜுலை 27 ஆம் நாள்தான் வரும். இந்த கிரகணத்தை முழுமையாக உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆபிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென் அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம் தொடங்குகிறது.


முழு சூரிய கிரகணத்தின் போது, சூரியன் சந்திரனின் நிழலால் மறைக்கப்பட்டு கறுப்பாகத் தெரிவது போல, முழு சந்திர கிரகணத்தின் போது, சந்திரன் கறுப்பாக/ இருட்டாகத் தெரிவது இல்லை. சந்திரன் முழு கிரகணத்தின் போது காணாமல் ஓடிப் போவதும் இல்லை. சந்திரன் பூமியின் நிழல் வழியே நகரும்போது, பூமியின் வளிமண்டலம் மூலமாக, சந்திர மறைவுப் பிரதேசங்களில், சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரதிபலிக்கின்றன. இப்போது பூமியில் மட்டும் வளிமண்டலம் இல்லாது போயிருப்பின், சந்திரன் கறுப்பு நிலாவாக காட்சி அளித்திருக்கும்.


பூமியின் வளிமண்டலம்தான் அதில் பட்டு சந்திரனில் சிதறும் அகச் சிவப்பு ஒளித் துகள்கள்தான் முழு சந்திர கிரகணத்தின்போது அதனை சிவப்பான செம்பு நிலாவாகக் (Copper moon) காட்டுகிறது. இதுவேதான். சூரியன் உதிக்கும்/ மறையும்போதும், அதன் சிவப்பு வண்ணத் தூரிகை கொண்டு வான் மேகத்தில் சிவப்பு ஆரஞ்சு வண்ண ஓவியம் வரைவதன் காரணியும்.


பால்வழி மண்டலம்
நமது சூரிய குடும்ப தாய்வீடான பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். சரித்திரம் படைத்த முழு சந்திர கிரகண நிகழ்வுகளும் உண்டு. சந்திர கிரகணம் அரிதானதுதான் என்றாலும், முழு சூரிய கிரகணம் போல அவ்வளவு அரிதானது கிடையாது.


ஏனெனில் முழு சூரிய கிரகணம் உலகின் சில பகுதிகளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், முழு சந்திர கிரகணம் உலகில் இரவில் இருள் சூழ்ந்த பாதி புவிப் பகுதிக்கு தெரியும்.


சரித்திரத்தில் பதிவுடன் எழுத்துக்களில் பதித்த முதல் முழு சந்திர கிரகணம், சீனாவில் சோயூ வம்சத்தின் (Zhou Dynasty) சோயு-சூ புத்தகத்தில், கி. மு. 1136 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் நாள் நிகழ்ந்தாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மீக கூறூவது?

சூரிய மண்டலத்தில் சூரியன்,சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்று வான் பொருட்கள் ஒரே நேர்கோட்டில் நிற்பதை கிரகணம் என்கிறோம். சூரிய சந்திரர்கள் எது ஒளியை பூமியிலிருந்து பார்க்க முடியாதோ அது கிரஹணம் அடைந்ததாக கூறப்படுகிறது. சூரியன் மறைக்கப்பட்டு சூரிய ஒளி தெரியவில்லை என்றால் சூரிய கிரகணம் என்றும், சந்திரன் ஒளி பெறாமல் இருளாக இருந்தால் சந்திர கிரகணம் என்றும் கூறுகிறோம்.


இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்? இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்


செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.


இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.


தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கின்ங்கள் கூட கிரஹணத்தான்று தன் இருப்பிட்த்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?.


கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.


தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.


வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழுசூரியகிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.


கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.


மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.


ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.
முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள்.

செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.


கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.
• கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
• கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
• ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
• தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
• சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
• சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
• கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.


உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். இந்த வருடம் சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது.

இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?


நன்றி

இந்துத்துவம்- VI

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?
`இதோ பாரடா... நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன். அதனால் அவள் உனக்குரியவள்தான். உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்’ என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.
இஃது களவியல் என்றால்... தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள். காதலை அஃதாவது கற்பியலை.
``யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...’’
நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம். என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது. நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.
ஆனாலும்... இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்... எப்படி தெரியுமா... செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே. அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.
இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.
இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் `தாலி’ வந்த கதை சுவாரஸ்யமானது.
திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.
பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.
``இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே... இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?’’
கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.
ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள். என்னென்ன.... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.
1. திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்பூலம்.
2. கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
முதலில் காசி யாத்திரை.
சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்... மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே.. என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால் கல்யாணத்துக்கு முன் `காசியாத்திரை’ என்றொரு சடங்கு.
அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல `பாவ்லா’ (Drama) செய்யவேண்டும். மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.
3. ஊஞ்சலாட்டுதல்
குழந்தாய்... நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ். அதாவது (Festival) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.
4. மாலை மாற்றுவது:
இது க்ஷத்திரியர்களின் கலாச்சாரம். மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.
5. திருஷ்டி சுத்தி போடுவது. மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.
6. நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.
7. இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க... பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றி குளிப்பாட்ட வேண்டும்.
8. பிறகு... முழுக்க நனைந்த அவளை... உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.
அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு... புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது... இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி. சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப்புடைவைச் சடங்கு.
இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்... அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்து பார்ப்போம்.

பாப மூட்டைகளைச் சுமக்கும் புண்ணிய ஆத்மாக்கள்


ஒரு ஜீவன் இந்த உலகில் ஜனித்த உடனேயே அவருடைய ஜாதகம் அவரது பூர்வ புண்யத்தைத் தெளிவாக உணர்த்தி விடும். 12 வயதுக்கு மேல்தான் ஒரு ஜீவன் பாபங்களைச் செய்ய ஆயத்தம் ஆகின்றது என்கின்றது ஜோதிட சாஸ்திரம். 12 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் ஸ்திரம் இல்லை என்பதினால் சொல்லப்பட்ட கருத்து இது. உலக நடப்பு மனதுக்குப் புரிய ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டம் முதல் ஒருவனுக்கு நல்ல படிப்பினைகள் போதிக்கப்பட்டால் நிச்சயம் அவனால் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்காமல் இருக்க இயலும். எந்த கிரகம் இவனுக்குப் பாபங்களைச் செய்யத் தூண்டப் போகின்றது என்பதை 12 பாவங்களில் உள்ள கட்டங்கள் நிச்சயம் சுட்டிக்காட்டும். இதற்கான நிவர்த்திகளை ஆரம்பம் முதலே பெற்றோர்கள் மேற்கொண்டால் பாப மூட்டைகள் நம் முதுகினில் ஏற்றப்படமாட்டது என்பதே உண்மை.

நல்ல காரியங்கள், தர்மங்கள், தானங்கள் செய்வதன் மூலமே புண்யங்கள் ஒருவருக்குச் சேர்கின்றன. நல்லதையே நினைப்பவருக்கு நல்லதே நடக்கின்றது என்றால் அந்த நல்லதை நினைக்கச் செய்வதும் இந்த ஒன்பது கிரகங்களின் வேலைதானே… பாபகிரகங்கள் பாபத்தைச் செய்யமங தூண்டாமல் இருக்க அந்தக் கிரகத்தினுடைய அத்தேவதையை ஆராதிக்கும் பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே அந்த ஜீவனுக்கு அறிவுறுத்திவிட்டால் பாபகிரகங்கள் தன் வேலையைச் செய்ய மறக்கச் செய்துவிடலாமே. கஷ்டங்களும் நஷ்டங்களும் எல்லோருக்கும் வராமல் இல்லை. எந்த கிரகம் அந்த நேரத்தில் கஷ்டங்களை ஏற்படுத்துகின்றது என்று உணர்ந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொண்டால் பாபங்கள், துன்பங்கள் விலக்கப்பட்டுப் புண்யங்களைச் சேர்த்துக்கொண்டு விடலாமே…

அவரவர் சக்திக்குத் தகுந்த பரிகாரங்களைச் செய்வதே புண்யங்களை அதிகரிக்கும் செயலாகும். செய்ய முடியாத பரிகாரங்களைப் பல ஜோதிடர்கள் கூறி அதைச் செய்ய முடியாமல் போகும் நபர்களின் மன வேதனையால் அவர்கள் மட்டும் இன்றி ஜோதிடர்களும் அதற்கான பாபத்தினைத் தன் வாழ்நாளில் சேர்த்துக்கொள்கின்றார்கள். பரிகாரங்களைப் பற்றிக் கூறும் சாந்தி குசுமாகாரம் பரிகாரங்களைப் பற்றி சொல்பவர்கள் பற்றியும் தெளிவாக இப்படிக் கூறுகின்றது.

ஆழியூர் பரந்தாமன் அந்த ஊரிலே பெரிய ஜோதிடர். அவர் அகத்துக்காரி பசு மாடு ஒன்று வேண்டும் என்று தினமும் நச்சரித்துக்கொண்டே இருந்தார். பசும்பால் சாப்பிட வேண்டும்… பால் வாங்கிக் கட்டுப்படியாகவில்லை என்பது அவரது குறை.

அன்று ஜோதிடம் பார்க்க வந்த நபருக்குப் பரிகாரம் சொல்லும்போது ஜாடை காட்டினார்… மாமி,

ஒரு நல்ல ஜாதி கறவை பசுமாடு வாங்கி தானம் செய்யுங்கள் என்னைப் போன்ற உத்தம ப்ராமணனுக்கு… உடனே இதைச் செய்ய வேண்டும்… என்றும் கட்டளை போட்டார் ஜோஸ்யர்.

அடுத்த நாள் ஜெர்ஸி பசு ஒன்று வந்து கட்டப்பட்டது ஜோஸ்யராத்துக் கொட்டிலில். தன் சக்திக்கு மீறிக் கடனை வாங்கி மனம் வேதனைப்பட்டு தானம் செய்யப்பட்ட பசு என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவாரா ஜோஸ்யர்…

மாமிக்கு பரம சந்தோஷம்… பால் கறப்பதற்காக ஆசையாகப் பெரிய சொம்பை எடுத்துக்கொண்டு ஆயத்தமானார் மாமி. பால் கறக்க ஆரம்பித்ததுதான் தெரியும் மாமிக்கு… கண் விழித்துப் பார்த்தபோது பிரபலமான ஹாஸ்பிடலில் மிசிஹிஇல் இருப்பது புரிந்தது. மாடு கொடுத்த ப்ரயோகம் மாமிக்கு முகத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி… செலவு நாற்பதாயிரத்துக்கும் மேல். தன் தேவைக்காகச் சொன்ன பரிகாரத்துக்கு ஜோஸ்யராத்து மாமிக்குப் பலன் நன்றாகவே கிடைத்தது.

கலியுக தர்மத்தில் செய்த பாபங்களுக்குத் தண்டனை இந்த ஜென்மத்திலேயே பெரும்பாலும் கிடைத்துவிடுகின்றது. ஆனாலும் தெரியாமல், புரியாமல் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. தவறு செய்தவர்கள் திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள், பரிகாரங்கள் ஜோதிட சாஸ்திர ரீதியாகச் சொல்லப்பட்டும் உள்ளன. ஆனால் தெரிந்தே செய்யும் தப்புகளுக்கான பரிகாரங்கள் செய்தாலும் இந்த ஜென்மத்தில் பலன் கிடைப்பதும் இல்லை. அவர்கள் வருந்த வேண்டிய சூழ்நிலையே உள்ளது. அப்படிச் சேர்க்கும் பாப மூட்டைகள் அடுத்த ஜென்மத்தில்தான் அனுபவித்தே தீர்க்கப்பட இயலும்.

கலியுகத்தில் அன்னதானம், வேத ப்ராமண ஆசிர்வாதங்கள் போல் புண்ய பலன்களைத் தருவது எதுவும் இல்லை என்கின்றது தர்ம சாஸ்திரம். தான தர்மங்கள் தனது வருமானத்தில் பத்து சதவிகிதமாவது செய்ய வேண்டும் என்று மற்றய மதங்கள் வலியுறுத்துகின்றன. நமது இந்துமத தர்மத்தில் சதவிகிதங்களைப் பற்றிக் கூறாவிட்டாலும் தனது சக்திக்குத் தகுந்த தான தர்மங்களைச் செய்து புண்யங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அனாஸாயேன மரணம் வினாதைன்யேன ஜிவீதம் பெற்றவர்கள்தான் வாழ்வில் புண்யங்களைச் சேர்த்தவர்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாப மூட்டைகளை என்றுமே சுமக்க விரும்பாத உண்மையான புண்ய ஆத்மாக்கள் இவர்கள்.

சேர்த்து வைத்துள்ள பாப கர்மாக்களை முழுவதும் இந்த ஜென்மத்திலேயே போக்கிக்கொள்வதற்கான வழிகள் பலவாறு தர்ம சாஸ்திரங்களிலேயும், ஜோதிட சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டு இருந்தாலும் மனம் என்னவோ அடுத்து வரும் ஜென்மத்தின் மீதுள்ள வேட்கையால் பாப மூட்டைகளை மீண்டும் மீண்டும் சுமக்கத்தானே விரும்புகின்றது.

விரிவடையும் பிரபஞ்சம் மீண்டும் சுருங்குமா?


எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும், வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை. ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்? வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால் வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.


வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை மட்டையால் அடித்தால் அந்த பந்து சென்று கொண்டே இருக்கும்; விழவே விழாது. சிக்செர் எல்லாம் தாண்டிச் சென்றுவிடும். வேறு யாராவது அடித்த வேறு ஒரு பந்து, நாம் அடித்த பந்தின் அருகில் வந்தால் இரண்டு பந்தும் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு இணைந்துவிடும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் அதனதன் நிறைப்படி ஈர்ப்புவிசை இருக்கின்றது.

(சூரியன் உருவாகியவுடன் ஏற்பட்ட அதிபயங்கர வெடிப்புடன் உண்டான புகையும், தூசும் இப்படிதான் தூக்கி எறியப்பட்டு சூரியனைச் சுற்ற, அவை ஈர்ப்பு விசையால் இணைந்து தான் இந்த பூமியும் மற்ற கோள்களும் உருவாகின)

மா வெடிப்பிற்குப் பிறகு விரிவடைந்த பிரபஞ்சம் அதன் வெடிப்பு வேகம் குறையும்போது பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்களின் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு சுருங்கி, தொடங்கிய நிலைக்கே வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர். அதனை மா சுருக்கம் (big crunch) என்று அழைத்தனர். மாவெடிப்பு ஏற்பட்டு 1300 கோடி ஆண்டுகள் ஆனதனால் விரிவாக்க வேகம் குறைந்து ஈர்ப்பு விசையினால் இந்த சுருக்கம் ஆரம்பித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

ஆனால் அதிநவீன தொலைநோக்கியில் பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறையவில்லை என்றும், மாறாக பிரபஞ்சம் வேகமாய் விரிவடைவதை கண்டறிந்தபோது விஞ்ஞானிகள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள் . இந்த வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருந்தால் ஈர்ப்பு விசை வலுவிழந்துவிடும். அதன் விளைவு மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதாவது நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து மேலே எழுந்து முதலில் மிதக்க ஆரம்பிக்கும். எல்லாப் பொருட்களும் அணு அணுவாகப் பிரிந்து வெளியில் விலகிச் சென்றுவிடும். மனிதர்களும், விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் ஈர்ப்புவிசை தான் இவையனைத்தையும் இழுத்து இணைத்து வைத்திருக்கின்றன. முன்னர் கூறியதுபோன்று சூரிய குடும்பதில் உள்ள எல்லா கிரகங்களும் சூரியனை விட்டுப் பிரிந்து சென்றுவிடும். விரிவாக்கக வேகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் பிரபஞ்சம் அழியும் என்ற கோட்பாட்டை பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆனால் கனடா நாட்டில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பரம்சிங் என்ற மதிப்பிற்குரிய இந்திய விஞ்ஞானி இந்த விரிவாக்கம் தொடர்ந்து நடக்காது, பிரபஞ்சம் ஈர்ப்புவிசையால் மீண்டும் சுருங்கும் என்கிறார். அவர் ஒரு புதிய கணக்கை வெற்றிகரமாக வடித்துள்ளார். அந்த கணக்கு கூறுவது என்னவென்றால் ஈர்ப்பு விசையினால் சுருங்கும் பிரபஞ்சம் மிக மிகச் சிறியதாக சுருங்கிவிட்டால் ஈர்ப்புவிசை எதிர்விளைவுகளை ஏற்படுத்தி பிரபஞ்சத்தை விரிவாக்கும் என்பதுதான். அதற்கு 'big bounce' என்று பெயர் கொடுக்கிறார். நாம் வாழும் இந்த பிரபஞ்சம் அப்படிதான் உருவாயிருக்கின்றது என்று தெளிவுபட கூறுகின்றார்.

விரிவடைதலும் சுருங்குவதும் என்ற திரும்பத் திரும்ப நடைபெறும் நிகழ்ச்சியால்தான் நாம் இப்போது வாழும் இந்தப் பிரபஞ்சம் இந்த நிலையில் இருக்கின்றது. 1300 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படும் மாவெடிப்பின் மூலமாக பிரபஞ்சம் முதன் முதலாகத் தோன்றவில்லை. முன்னரே இருந்த பிரபஞ்சம் சுருங்கி விரிவடைந்ததினால் தான் அது பௌதீக விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்றது என்று கூறுகிறார் .ஒன்றுமே இல்லாத நிலையிலிருந்து பிரபஞ்சம் உருவாகவில்லை என்று அவர் உறுதிபட கூறுகின்றார். மிகச் சிறிதாக சுருங்கிய பிரபஞ்சத்தை 'ஒன்றுமில்லாத நிலை' என்று கூறமுடியாது என்கிறார்.

ஆனால் எப்பொழுது பிரபஞ்சம் முதன்முதலில் தோன்றியது என்ற கேள்விதான் ஆராயப்பட வேண்டியது என்கிறார். அவரது கோட்பாடும் பலரது பாராட்டைப் பெற்றிருக்கின்றது

முன்னர் ஒரு பிரபஞ்சத்தின் பல கருந்துளைகள் மூலமாக புதிய பல பிரபஞ்சங்கள் தோன்றியிருக்கின்றது என்று சில விஞ்ஞானிகள் கூறும் கோட்பாட்டைப் பற்றி பார்த்தோம். மற்றொரு கோட்பாடு பிரபஞ்சம் தோன்றி விரிவடைதாலும், பின்னர் சுருங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளினால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகின்றது..

இவை இரண்டும் இணைந்தே இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கலாம் அல்லவா?

பிரபஞ்சம் கருந்துளைகள் மூலமாக பல புதிய பிரபஞ்சங்களை உண்டாக்குவது, ஒரு மரம் முளைத்து அது பல விதைகளை உண்டுபண்ணி பெருகுதலை ஒத்தும், விரிவடைந்து சுருங்கும் பிரபஞ்சம் ஒரு வாழை மரம் வளர்ந்து பெரிதாகி, பின்னர் அழிந்து மீண்டும் பூமியின் அடியில் உள்ள கிழங்கிலிருந்து முளைப்பது போலவும் உள்ளதல்லவா? பூமியில் உயிரினங்கள் எப்படி பெருகுகின்றனவோ அதேபோல பிரபஞ்சமும் பெருகுகின்றன என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் பல தடைகற்களைக் கடந்து அனைத்து உண்மைகளையும், மனித குலத்திற்கு வெற்றிகரமாக வழங்குவார்கள்.


தினம் ஒரு திருமந்திரம் 20-07-2013


மூலத்து மேலது முச்சது ரத்தது
கால் அத்து இசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

பொருள் : குண்டலினி நான்கு இதழ்களோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோணவடிவமானது. அது அபானன் சத்திகெட்டுப் பிராணனோடு சேர்கின்ற இடத்தில் பெருமைமிக்க அர்த்த சந்திரனில் நெற்றிக்கு நடுவேயுள்ள வடிவத்தில் அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகளாக விளங்கும்.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்


வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

Friday, July 12, 2013

தினம் ஒரு திருமந்திரம் 12-07-2013

பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவுஇல்லை தானே.

பொருள் : இந்திரியங்கள் ஓய்வு பெறுகின்ற பள்ளி அறை என்ற பரஅவத்தையில் (பரை நிலையில்) ஒளியேயன்றி இருளில்லை ஒளியேயுள்ள அறையான படியால் வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம். ஒளியை உடையதாகிய இந்நிலையை அறியில் இது தியானத்தில் எய்தப் பெறுவது ஆகும். இருளே இல்லாதபடியால் விடிவே இல்லை. (பள்ளி அறை - உள்ளம் கொள்ளி அறை - சுடுகாடு எனினும் ஆம்)

இந்துத்துவம்- V

தமிழ் பூக்களால் தமி ழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.
இதுமட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.
சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...
‘ஏ... காவல் காக்கும் அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக் கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.
ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால்தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேற்றப் படும்... என்பது நம்பிக்கை.
இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவதுபோல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா? க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடி வயிற்றிலிருந்து அதிரும் படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.
இந்த உரத்த வழிபாடு ஒருபக்கம் நடந்துகொண் டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக்கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?
தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து... ‘இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்.
அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த ‘தாஸே‘ இனப் பெயரிலி ருந்துதான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது.
தங்களை அன்று கும் பிட்ட ‘தாஸே‘ இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள் கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.
“நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக் குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப் படி பேசுவீர்கள்?
... என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள்தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப் பது என்னவென்றால்... கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உப தேசிப்பது என்னவென்றால்... “கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம்.”
வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா’ தொடங்கியது படையல் பண்பாடு.
நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டி யலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன. தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.
வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?... உண்டானது.
கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்?
பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.
இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.
சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?
பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.
ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.
ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே... தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது.
கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம்.
பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.

Wednesday, July 3, 2013

இந்துத்துவம்- IV

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.
இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.
பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.
(i) கல்லை வழிபடுதல்-Fetish worship
(ii) விலங்குகளை வழிபடுதல்-Totemism worship
(iii) மனித- உரு செய்து வழிபடல்-Shamnaism worship
(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல்-Idol worship
நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன. தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறுதாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.
வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.
பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டதுதான் தமிழனின் முதல் வழிபாடு.
பூசெய்= பூவால் செய் இது இணைந்ததுதான் பூசெய் பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது.
இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.
நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு... என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.
‘நாயக’ நாயகி பாவம்’ என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம்தான்.
இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது.
நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்து விட்டது.
வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.
அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது. புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு ‘சம்மந்தி’ உறவு முறை வரை நெருங்கிவிட்ட நிலையில்...
பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர். புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.
பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா)... பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.
என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள். ‘சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து’...
ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது.
வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈ டுபட்டிருக்கும்போது.. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.
அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈ டுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும்.. வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.
இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.
இதை ‘அந்தஸ்து’ என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.
சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட பூமிக்கு நோகக்கூடாது! மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு...
தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது. இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன் என்றனர்.
பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?

தினம் ஒரு திருமந்திரம் 03-07-2013

தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமிஈர் ஐந்தும் நியமத்த னாமே.

பொருள் : தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, உறுதியுடைமை யாகியவற்றை வளர்த்தலும், ஏனைய காமம், களவு கொலை யாகியவற்றைத் தீமையெனக் காண்டலுமாக நியமநெறியில் நிற்பவன் பத்துக் குணங்களைக் கொண்டவனாவான். (நேமி-நியமத்தை உடையவன், காதல் உயிரின் மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன.)