Monday, July 15, 2019

உங்களால் முடியாதா

இறைந்து கிடந்த எலுமிச்சம்பழம் இன்னைக்கு ஒன்னு ஏழு  ரூவா.. சும்மா கிடந்த பப்பாளி இன்னைக்கு கிலோ நாப்பது ரூவா.. வீடு தோறும் இருந்த கொய்யா இன்னைக்கு கிலோ அறுவது ரூவா.. வேலியில் படர்ந்து கிடந்தும் பழுக்கும் வரை தீண்டப்படாத கோவைக்காய் கிலோ அறுவது ரூவா.. கேட்பாரற்று கிடந்த கொடுக்காப்புளி, சீத்தாப்பழம் இன்னைக்கு கிலோ எண்பது ரூவா.. நினைத்த போதெல்லாம் பறித்து தின்ற சப்போட்டா கிலோ எண்பது ரூவா.. கொட்டிக்கிடந்த நாவல்பழம் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா.. ரூவாக்கு பத்து வித்த நெல்லிக்காய் இன்னைக்கு கிலோ நூத்தி இருவது ரூவா.. திட்டினாலும் திங்காத மாதுளை கிலோ நூத்தி எண்பது ரூவா.. இனி கூடிய விரைவில் ஈச்சம்பழம், விளாம்பழம், வேப்பம்பழம், நார்த்தம்பழம், கிடாரங்காய், கருவேலங்குச்சி, மருதாணி, வேப்பிலை, மாவிலை, நொச்சி, ஆடாதொடா, வில்வம், பவளமல்லி, பப்பாளி இலை, அருகம்புல் எல்லாம் இந்த விலைபட்டியலில் சேர இருக்கு.. அதோட வேப்பம்பூ, மாம்பூ, மாதுளை பூ, செம்பருத்திப்பூ, நந்தியாவட்டை பூ, மகிழம்பூ மாதிரி மறந்து போனவை பலவும் இனி வரும்..
இதெல்லாம் என்ன விளைய வைக்க முடியாத அதிசய பொருளா..? இவ்ளோ விலை விக்குதே, இதை உற்பத்தி செஞ்சு வளர்ந்தது விவசாயியா..?
நம்ம வீட்டிலேயே இதையெல்லாம் வளர்த்தா நம்ம பிள்ளைங்களாவது சாப்பிட கிடைக்குமல்லவா...
வரும் தலைமுறைக்கு சொத்து மட்டும் சேர்த்தா போறாது சொந்தங்களே ..!!!