Saturday, April 14, 2012

தினம் ஒரு திருமந்திரம் (14-04)


மூலத் துவாரத்தை முக்காரம் இட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்து இதுதானே.

பொருள் : மூலாதாரத்தை ஆகுஞ்சனம் என்ற முத்திரையால் அடைத்துக் கொண்டிரு பிரமரத்தின் மேல் மனத்தைப் புறம் விழித்தபடி இரு இதுதான் காலத்தை வெல்லும் உபாயமாகும். (ஆகுஞ்சனம் - குதத்தை மேலெழும்படி அடைத்திருத்தல்.)

No comments:

Post a Comment