Saturday, April 14, 2012

தமிழர்கள் இழந்த உண்மையான நாகரீகம்

மேல்நாட்டு நாகரீகம் என்ற ஒரு மோகத்தில் தமிழர்கள்
இழந்த உண்மையான நாகரீகம்.

1. மண்பானை சமையல்.
மண்பானை சமையல் ஆரோக்கியமானது.
நீண்ட ஆயுள் தரக்கூடியது. மண் பானையில்
சமைத்து உண்டவர்கள்100 வயது வாழ்ந்தது
சாதாரண விஷயம். ஆனால் இன்று
60 வயதை தாண்டுவது பெரிய விஷயம்.

 2. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி.
வேப்பங்குச்சியில் பல் துலக்கி கொண்டு இருந்த போது
ஆரோக்கியமான பல் இருந்தது. இன்று பிரஷ் மூலம் பல்
துலக்க வைத்து ஆரோக்கியம் இல்லாத பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல் மருத்துவர்களின்
எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

3. இயற்க்கை மருத்துவ முறை
ஆங்கிலேய ஆளுமை காலத்தில் தமிழர்களின் பல
நூற்றாண்டு பெருமை பெற்ற மருத்துவ முறைகள்
அழிக்கப்பட்டன. அதற்க்கு பதிலாக அவர்கள் கொண்டு
வந்த அலோபதி மருத்துவ முறை அதிகமான பக்க
விளைவுகள் கொண்டது.

4. இயற்கை வாசனை திரவியங்கள்
இயற்கையான வாசனை திரவியங்களை தயார் செய்து
உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்று வணிகம்
செய்தார்கள் தமிழர்கள். ஆனால் இன்று ரசாயன வாசனை திரவியங்களை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

5.கட்டிட கலை
கட்டிட கலையில் நுண்ணறிவு கொண்ட கை
தேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
ஆனால் இன்று யாருமே இல்லை என்பது தான்
உண்மை.

6. பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய்,
மஞ்சள்
பாசி பயத்து மாவு, கடலை மாவு, சீயக்காய் தேய்த்து
குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது மட்டும் அல்ல
எந்த பக்க விளைவுகளும் இல்லாதது. மேலும் இவை 
நீரில் கலக்கும் போது எந்த தீங்கும் இல்லாதது.
மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களுக்கு 99% தோல்
சம்பந்தமான வியாதிகள் வராது.
ஆனால் இன்று சோப்பு, ஷாம்பு மற்றும் பல ரசாயனம்
கலந்த பொருட்கள் தான் அதிகம் வாங்கப்படுகிறது.
மேலும் இவற்றை உபயோகித்து குளித்தபின் இவை
நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகின்றன. சற்றே
யோசித்து பாருங்கள், ஒரு நாளைக்கு, உலகம் முழுவதும்
எத்தனை பேர் சோப்பு, ஷாம்பூ உபயோகிக்கிறார்கள் என்று.
அவர்கள் தினமும் குளிக்கும் போது எத்தனை
கோடி லிட்டர் தண்ணீரில் இந்த சோப்பும், ஷாம்பூவும்
குளித்தபின் கலக்கும் என்று.

7. செருப்பு.
ரப்பர் செருப்பும், தோல் செருப்புமே ஆரோக்கியமானவை
இந்த ஷூ அணிவது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
காலை முதல் இரவு வரை ஷூ அணிந்துவிட்டு இரவில்
அதை கழற்றும்போது உங்கள் பாதத்தை புறங்கையால்
தொட்டு பார்த்தீர்களானால் மிகவும் வெப்பமாக இருக்கும்.
இந்த வெப்பம் உடலுக்கு தீங்கானது. ரப்பர் செருப்பும்,
தோல் செருப்பும் அணியும் போது இந்த வெப்பம் இருக்காது.

8. கோவணம்
இந்த தலைப்பை பார்த்தல் பல தமிழர்களுக்கு
மிகவும் கேவலமான ஒரு விஷயம் என்று தோன்றும்.
கோவணம் அணிந்திருக்கும் ஒரு ஆணின்
விந்தணுக்களின் வீரியம் நல்ல நிலையில் இருக்கும்.
ஆனால் ஜட்டி அணிந்திருக்கும் ஒரு ஆணின்
விந்தணுக்களின் வீரியம் மிகவும் குறைவாக இருக்கும்
காலை முதல் இரவு வரை ஜட்டி அணிந்திருக்கும்
ஒரு ஆண், இரவில் ஜட்டியை கழட்டும்போது அவன்
இரு தொடைகளும் சேரும் இடத்தில் அவன் புறங்கையால்
தொட்டு பார்த்தால் மிகவும் வெப்பமாக இருக்கும்.
இந்த வெப்பம் அவனது விந்தணுக்களின் வீரியத்தை
குறைக்கும். ஆனால் கோவணத்தை 24 மணி நேரமும் அணிந்திருந்தாலும் இது போன்ற வெப்பம் இருக்காது.
கோவணம் அணிந்த ஒரு கிராமத்து கிழவரின்
விந்தணுக்களின் வீரியத்தை விட ஜட்டி அணிந்த
ஒரு நகரத்து இளைஞனின் விந்தணுக்களின் வீரியம்
குறைவாக இருக்கும்

9.கடுக்கண்
இரண்டு காதுகளிலும் வெள்ளி அல்லது தங்கத்தினால்,
கடுக்கண் அணிவது மூளையின் செயல்பாட்டை நன்கு
செயல்பட வைக்கும்

10. வீரம்
வீரத்தின் விளைநிலமாக இருந்தது தமிழர்கள் தான்.
ஆனால் இன்று வீரம் என்பது, குடி தண்ணீர் குழாயில்
சண்டை போடுவது, தண்ணீர் கேட்டு பக்கத்து
மாநிலத்திடம் சண்டை போடுவது, என்று பலர்
நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இது மிகவும்
கேவலமான விஷயம். சில நூறு ஆண்டுகளுக்கு
முன்பு வரை இருந்த அந்த வீரம் மீண்டும் தமிழர்களுக்கு
வருமா என்பது ??????????? 

No comments:

Post a Comment