Wednesday, December 27, 2023

மருத்துவ ஜோதிட விதிகளின் படி, நட்சத்திரங்களுக்கு உரிய மருத்துவ முறைகள்!

 


எல்லா மருத்துவ முறைகளும் அனைத்து நட்சத்திர ஜாதகர்களுக்கும் சிறப்பான பலன்களை தருவது இல்லை.


ஜென்ம நட்சத்திரம் என அழைக்கபடும் சந்திரன் நின்ற நட்சத்திரம் அல்லது தசா நாதன் நின்ற நட்சத்திரம் எதுவாக இருக்கின்றது அல்லது இந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒரே நட்சத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மருத்துவமுறைகளை பின்பற்ற மிக அற்புதமான பலன்களை பெற்று நோயில் இருந்து விரைவில் குணம் பெறலாம்.


1.ஆங்கில மருத்துவம்


பரணி

கிருத்திகை

திருவாதிரை

புனர்பூசம்

மகம்

பூரம்

உத்திரம்

கேட்டை

மூலம்

பூராடம்

திருவோணம்

சதயம்

ரேவதி


2. சித்த மருத்துவம்


அஸ்வினி

கிருத்திகை

புனர்பூசம்

பூரம்

சித்திரை

சுவாதி

சதயம்


3. ஹோமியோ மருத்துவம்


அஸ்வினி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

பூசம்

சித்திரை

விசாகம்

உத்திராடம்

அவிட்டம்

சதயம்

பூரட்டாதி

உத்திரட்டாதி


4. ஆயுர்வேத மருத்துவம்


ரோஹிணி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

பூரம்

சித்திரை

அனுஷம்

சதயம்

பூரட்டாதி

ரேவதி


5. யுனானி மருத்துவம்


ரோஹிணி

மிருக சீரிஷம்

புனர்பூசம்

பூரம்

சித்திரை

அனுஷம்

சதயம்

பூரட்டாதி

ரேவதி


6. வர்ம மருத்துவம்


அஸ்வினி

திருவாதிரை

மகம்

சுவாதி

மூலம்

உத்திராடம்

சதயம்

உத்திரட்டாதி


7. மலர் மருத்துவம்


ரோஹிணி

மிருகசீரிஷம்

புனர்பூசம்

பூசம்

ஆயில்யம்

மகம்

ஹஸ்தம்

சித்திரை

சுவாதி

விசாகம்

அனுஷம்

கேட்டை

திருவோணம்

அவிட்டம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி


8. பயோ சால்ட்


ரோஹிணி

புனர்பூசம்

பூசம்

ஆயில்யம்

மகம்

ஹஸ்தம்

சுவாதி

விசாகம்

அனுஷம்

கேட்டை

திருவோணம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி


நன்றி


Gandhi Kumar,

ஆருத்ரா ஜோதிட ஆராய்ச்சி மையம்.


சோதனை செய்து பார்த்துவிட்டு தங்களின் பதிலை கமெண்டில் பதிவிடவும்.

Tuesday, June 27, 2023

GERD_என்றால்_என்ன



GERD_பற்றி_தெரிந்து 

கொள்வோம்


👉(Gastro esophageal reflux disease)👈


 *GERD என்றால் என்ன* ❓


👉உணவு உண்டபின் வயிற்றிலிருக்கும் உணவு மேல் நோக்கி, தொண்டை மற்றும் வாய்க்கு வருவதே GERD  எனப்படும்.


 *இதன் அறிகுறிகள்*  *என்ன* ❓


👉உணவு செரியாமை, நெஞ்சு மற்றும் தொண்டை வரை எரிச்சல், வாய்துர்நாற்றம், வாந்தி  அல்லது குமட்டல் வயிற்றில் வலி.


 *இது எவ்வாறு* *உருவாகும்* ❓


👉தவறான வாழ்க்கை முறை, சேராத, செரியாத உணவு உண்ணுதல், அதி காரம்  மற்றும் புளிப்பு உணவில்  சேர்த்தல், நேரம் தப்பி உணவு  உண்ணுதல்,  வயிற்றில் ஏற்படும்  ஹெலிகோ பாக்டர் எனும் கிருமி தொற்று ஆகியவை காரணமாகும்.


 *GERD வந்தபின்* *எவ்வாறு அதனை* *கட்டுப்படுத்தலாம்* ❓


👉 GERD யை தூண்டும் விதமான உணவுகளை தவிர்க்கவும். அதாவது எண்ணெய் பலகாரங்கள், காரம், புளிப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, காபி, சாக்லேட், பதப்படுத்தப்பட்ட பொருட்கள்.


👉அரை வயிறு நிறைய ஒரே நாளைக்கு 5-6 முறை உணவினை எடுத்துக்கொள்ளவும்.


👉உணவு உண்டபின் *மூன்று மணி நேரம்* கழித்து உறங்கச்செல்லவும். உறங்கும் போது தலைபகுதியை  6-8 இன்ச் வரை  உயர்த்தி *இடது பக்கம்* திரும்பி உறங்கவும்.


👉உடல் பருமன் GERD உண்டாவதற்கான முக்கிய காரணம். வயிற்றில்  சேரும் கொழுப்பு வயிற்றின் பகுதியை  மேல் நோக்கி தள்ளுவதால் GERD உண்டாகும். அதனால் எடையை குறைக்கவும்.


👉புகைபிடித்தல் மற்றும்  மது அருந்துதல்  தவிர்க்கவும். இவை இரண்டும்  வயிற்றில் மேல்  பகுதியில் உள்ள வால்வை  மேலும்  தளர்வடையச்செய்யும்.


👉ஒவ்வொரு முறை உணவு உண்டபின் 100 அடி  நடக்கவும்.


👉உணவு உண்டவுடன் தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவும்.


👉முதலில், உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உணவுக் கூழ் போல் ஆகும் வரை வாயில் வைத்து நன்றாக மென்று, பின்னார் விழுங்க வேண்டும். சுவைத்து, சுவைத்து சாப்பிடுவது உணவு எளிதில் ஜீரணமாக உதவுகிறது. 


👉மனக் கவலை, பயம், கோபம், வருத்தம் போன்ற உணர்வுக்ளோடு சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகள் ஏற்பட வழிவகுக்கும். 


👉சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


👉 அதுபோல் சாப்பிட்டு முடித்து ஒருமணி நேரத்திற்குப் பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பத்தால் உணவு சரியாக ஜீரணமாவதற்கு முன்பாகவே வயிற்றிலிருந்து குடலுக்கு தள்ளப்பட்டுவிடும். சாப்பிடும்போது காரமாக இருந்து, கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம். 


👉சுடுநீர் என்றால் மிக மிக நல்லது


👉சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. இரவு எழரை மணி முதல் எட்டு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 


👉சாப்பிட்ட பின்னர் உடற்பயிற்சி 

செய்யக்கூடாது. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது தான் நல்லது.


 *நீண்ட நாள் GERD* *தொந்தரவு கேன்சரை* *உண்டாக்குமா❓* 


👉ஆம் வெகு நாட்கள் சரியாக கவனிக்கப்படாத வயிற்று தொந்தரவு கேன்சராக மாறும் வாய்ப்புள்ளது.


👉 GERD பிரச்னையை முற்றிலும் இயற்கை முறையில் குணமடைய செய்யலாம்.


Tuesday, April 27, 2021

தொற்றுநோயை நான் எவ்வாறு தவிர்ப்பது?"

 "

 இந்த கேள்வி ஓஷோவிடம் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் காலத்தில் கேட்கப்பட்டது!


 ஓஷோ கூறுகிறார்.


 ஓஷோ பதில்: தவறான கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள், கேள்வி சரியான கேள்வியாக இருக்க வேண்டும்:

  தொற்றுநோய் காரணமாக இறக்கும் பயத்தைத் தவிர்ப்பது எப்படி? "


 வைரஸைத் தவிர்ப்பது மிகவும் எளிதானது என்பதால், உங்களிடமும் உலகிலும் உள்ள பயத்தைத் தவிர்ப்பது மிகவும் கடினம்.

 தொற்றுநோயிலிருந்து (தொற்றுநோயை) விட இந்த பயத்திலிருந்து மக்கள் அதிகம் இறப்பார்கள்.

 இந்த உலகில் பயத்தை விட ஆபத்தான வைரஸ் எதுவும் இல்லை.

 இந்த பயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் உடல் இறப்பதற்கு முன்பு நீங்கள் ஒரு இறந்த உடலாகிவிடுவீர்கள்.

 இதற்கு வைரஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 இந்த தருணங்களில் நீங்கள் உணரும் பயங்கரமான சூழ்நிலை கூட்டு பைத்தியம் ...

 இது ஆயிரம் முறை நடந்தது, தொடர்ந்து நடக்கும்.

 கூட்டம் மற்றும் பயத்தின் உளவியல் உங்களுக்கு புரியவில்லை என்றால் அது தொடரும்.

 நீங்கள் வழக்கமாக உங்கள் பயத்தைத் தக்க வைத்துக் கொள்கிறீர்கள், ஆனால் கூட்டு பைத்தியக்காரத்தனமாக, உங்கள் நனவை முற்றிலுமாக இழக்க நேரிடும்.

 உங்கள் பயத்தின் கட்டுப்பாட்டை நீங்கள் எப்போது இழந்தீர்கள் என்பது கூட உங்களுக்குத் தெரியாது.

 பின்னர் பயம் உங்களை எதையும் செய்ய வைக்கும்.

 அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையையோ அல்லது மற்றவர்களின் வாழ்க்கையையோ எடுத்துக் கொள்ளலாம்.

 வரவிருக்கும் காலங்களில் இவ்வளவு நடக்கும்:

 பலர் தங்களைக் கொன்றுவிடுவார்கள், மேலும் பலர் கொலை செய்வார்கள்.

 கவனம், கவனமாக இருங்கள்.

 பயத்தைத் தூண்டும் செய்திகளைப் பார்க்க வேண்டாம்.

 தொற்றுநோயைப் பற்றி பேசுவதை நிறுத்துங்கள், ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்வது சுய ஹிப்னாஸிஸ் போன்றது.

 பயம் என்பது ஒரு வகையான சுய ஹிப்னாஸிஸ்.

 இந்த யோசனை உடலில் ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும்.

 அதே கருத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் செய்தால், ஒரு வேதியியல் மாற்றம் தூண்டப்படுகிறது, அது சில நேரங்களில் மிகவும் நச்சுத்தன்மையுடையதாக இருக்கலாம், அது உங்களைக் கொல்லும்.

 ஒரு தொற்றுநோயின் போது, ​​உலகம் முழுவதும் ஆற்றல் பகுத்தறிவற்றதாகிறது.

 இந்த வழியில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கருந்துளைக்குள் விழலாம்.

 தியானம் ஒரு பாதுகாப்பு ஒளிமையாக மாறும், அதில் எந்த எதிர்மறை ஆற்றலும் ஊடுருவாது. "

கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?


* அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும். 


* விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 


* அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். நடைபயிற்சி மேற்க்கொள்வது  அவசியம். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும். 


* மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.


* அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும். 


* கீரைகள், பச்சை காய்கறிகள் சாப்பிடலாம், மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும். 


* ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம். வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக் கொள்ளலாம். 


* கொழுப்பு குறைந்த பால், ஆலிவ் எண்ணெயினை சமையல் பழக்கிக் கொள்ளுங்கள். 


* பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும், கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள். 


* பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். 


மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள்.  கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள். சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள். 


மேலும், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்.

Wednesday, October 23, 2019

மழை என்னும் மாமருந்து

மழை நீரில் குளிக்கும் ஒருவருக்கு ஒருவேளை சளிப் பிடித்து, காய்ச்சல் வந்தால், அவர் நலமாக (ஆரோக்கியமாக) இல்லை, எனவே அவை உடலுக்கு நலத்தை ஏற்படுத்துகின்றன என்று பொருள்.

தூய்மையான மழைத் தண்ணீரில் அளவுக்கு அதிகமாக உயிர்த் தன்மை (பிராணன்) இருக்கிறது.

மழைநீரில் நனையும்போது பலருக்கும் சளிப் பிடிக்கிறது... தும்மல் வருகிறது, காய்ச்சல் வருகிறது.

இது ஏன் வருகிறது...?

அதாவது மழைநீரில் அளவுக்கு அதிகமான உயிர்த் தன்மை (பிராணன்) இருப்பதால் நமது
உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்தப்
பிராணனை உறியத் தொடங்குகிறது.

உடலில் பல நாட்களாக, பல ஆண்டுகளாகத்
தேங்கிக்கிடக்கும் கழிவுகளைத் தும்மல்
வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல்
வழியாகவும் வெளியேற்றுகிறது.

ஒரு மனிதன் உடல்நலமாக (ஆரோக்கியமாக)
வாழ்கிறானா, இல்லையா என்பதை எப்படிக்
கண்டுபிடிப்பது என்றால், மழையில் நனைந்தால் அவனுக்கு சளிப் பிடிக்காமல், காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் நலமாக இருக்கிறான் என்று பொருள்.

எனவே, மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப்பாரத்து அச்சப்படவேண்டிய தேவை இல்லை. மகிழவாக இருங்கள்.

நமது உடல் நன்மை செய்கிறது. அது ஒரு மருத்துவம்.

எனவே யாருக்கு எந்த நோய் இருந்தாலும் மழையில் நனைவதன் மூலம் உடலைக் குணப்படுத்த முடியும்.

மழைநீரைக் குடிப்பதன் மூலமாகவும் நமது உடலில் உயிராற்றலை (பிராண சக்தியை) அதிகப்படுத்த முடியும்.

மழை வரும்போது முதலில் ஒரு ஐந்து நிமிடம் அந்த நீரைக் குடிக்கக்கூடாது. ஏனென்றால் காற்றில் தூசுகளும் குப்பைகளும்  ஊர்திகளிலிருந்து வரும் கழிவுப்பொருள்களும்
வானத்தில் இருக்கும்.

முதல் 5 நிமிடத்தில் மழைநீர் அந்தத் தூசுகள், குப்பைகளை எடுத்துக்கொண்டு நிலத்தை நோக்கி வரும்...

எனவே முதல் 5 நிமிடத்தில் வரும் மழைநீரை நாம் குடிக்கக்கூடாது, 5 நிமிடத்திற்குப் பின் வரும் மழைநீரை நேரடியாக ஏனத்தின் மூலமாகவோ, ஒரு கலனைப் பயன்படுத்தியோ அந்த நீரைப் பிடிக்கவேண்டும்.

ஒருவேளை நமது வீட்டின் கூரை தூய்மையாக இருந்தால்... கூரையிலிருந்து வரும்  மழை நீரையும் பிடிக்கலாம்.

இந்த நீர் உலகிலேயே மிகவும் தூய்மையான நீர். இதில் (உயிர்த் தன்மை) பிராணன் அதிகமாக இருக்கும்.

இந்தத் தண்ணீரை ஓர் ஏனத்திலோ, ஒரு புட்டியிலோ காற்றுப் புகாமல் அடைத்து சூரிய வெளிச்சம் படாமல் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டால் அந்தத் தண்ணீர் ஆறு ஆண்டுகளுக்குக் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஆனால் அந்தத் தண்ணீரில் சூரிய வெளிச்சம் பட்டுவிட்டால், 24 மணிநேரத்தில் அதில் புழு, புச்சிகள் வந்து அந்த நீர் கெட்டுவிடும்.

எனவே மழைநீரை சூரிய வெளிச்சம் படாமல் பாதுகாத்து அதை நாம் குடிக்கும்போது நமது உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்த் தன்மையும் கிடைத்து, நமது உடலிலுள்ள அனைத்து நோய்களும் குணமாகி, நமது உடல் நலம் அடைகிறது.

எனவே, மழைநீரின் உயிர்த் தன்மையை நாம் பயன்படுத்துவோம்.

குழந்தைகள் மழையில் நனைவதை நாம் குற்றம் என்று கூறி விரட்டி அடிக்கவேண்டாம்...

மழையில் நனைவது மிகவும் அருமையான, மகிழ்வான மனத்திற்குப் பிடித்தமான,  பெரு நிகழ்ச்சி. மேலும் நலமானதும் கூட.

எனவே இனிமேல் மழை வரும்போது அதில் நனையலாம். நல்லது. மழைநீரைக் குடிக்கலாம் நல்லது.

மழைநீர் ஓர் அருமையான மருந்து.

எனவே இனி நம் வாழ்வில் மழைநீரைச் சேர்த்துக் கொள்வோம்.

நன்றி!!

Monday, October 21, 2019

நோய் என்ன

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com

17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Saturday, September 28, 2019

வாசி யோகம்

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள் அதிகம்பேர் சமூகத்தில் உள்ளனர்.அதைப்பார்த்து நம்பிக்கை கொண்ட இளையதலைமுறையினர்களும் அவ்வழியிலேயே செல்ல முற்படுகின்றனர்.

ஆன்மீக வழியில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அனைத்தையும் துறந்து மிகவும் கஷ்டப்பட்டு,  பிச்சையெடுத்து வாழ்ந்து முடிவில் நோயால் மரணமடைவதையே காண்கிறோம்.இதை பேரின்ப வாழ்வு என அவர்கள் கூறினாலும் பெரும்பாலானவர்களால் நம்பமுடியவில்லை.

அவர்களை ஞானி என வணங்கமுடிகிறதேயொழிய அவர்களைப்பின்பற்ற  தைரியம் வருவதில்லை.ஏனென்றால் மனைவி, குடும்பம், குழந்தைகளை, வசதிகளை விட்டுவிட்டு கடவுளைக்காண்பதற்க்காக பிச்சையெடுத்து வாழ யாரும் முன்வருவதில்லை.பயம்தான் மிஞ்சுகிறது.

இந்த பயத்தை உடைத்து குடும்பத்திலிருந்துகொண்டே ஆன்மீகத்தில் முன்னேறி ஸித்திகளையும், ஜீவசமாதியையும் அடைய ஒரேவழி கிரியா யோகம் அல்லது வாசியோகம் என்ற விஞ்ஞானப்பூர்வமான பயிற்ச்சியை கற்றுக்கொண்டு எதையும் துறந்து ஓடாமல் அவரவர் வீட்டிலிருந்தபடியே பயிற்ச்சி செய்ய வேண்டும்.

இப்பயிற்ச்சியில் புறச்சடங்குகளில்லை, சாதி, மதம் இல்லை. வெறும்  மனித உடலையும் இயற்க்கையாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி காலையும், மாலையும் அரைமணிநேரம் உங்கள் நலனுக்காக பயிற்சி செய்தாலே போதும்.

இந்த அரைமணிநேர வாசிப்பயிற்ச்சி ஏராளமான நன்மைகளை வழங்கும்.இவ்வாறு பொறுமையுடன், ஞானமடைந்த குருவின் வழிகாட்டுதலுடன் இப்பயிற்ச்சியை செய்தாலேயே போதும்..

இதை அனுபவப்பூர்வமாக அடைந்து நல்வாழ்வு வாழ்பவர்கள் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமானால் ஆன்மீகம் ஒன்றே சமூகத்தில் நிலைபெற்று இருக்கும்.

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்ந்து நோய்க்கு விருந்தாகி இறப்போரைவிட, பணமும் சம்பாதித்து, நோய்நொடியின்றி வசதியாகவும் வாழ்ந்து வாசிப்பயிற்ச்சியால் ஜீவசமாதி அல்லது ஒளிஐக்கியமும் அடைபவர்கள்தானே உண்மையிலேயே ஞானிகள்?

. ஆன்மீகம் செழிக்க இறைவன் நமக்கு கொடுத்த நம் உடலெனும் கருவியை செம்மையாக பயன்டுத்தினாலே போதும்.

உடலையும், விலையில்லாமல் இலவசமாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி நோயில்லா,  மரணமிலா,துறவில்லா பெருவாழ்வை அடைய வாசியோகமே வழி

பூப்பறிக்க கோடரி எதற்க்கு?
வாழ்வை வெல்ல வாசி இருக்கு!!!