Saturday, September 28, 2019

வாசி யோகம்

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்பவர்கள் அதிகம்பேர் சமூகத்தில் உள்ளனர்.அதைப்பார்த்து நம்பிக்கை கொண்ட இளையதலைமுறையினர்களும் அவ்வழியிலேயே செல்ல முற்படுகின்றனர்.

ஆன்மீக வழியில் செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் அனைத்தையும் துறந்து மிகவும் கஷ்டப்பட்டு,  பிச்சையெடுத்து வாழ்ந்து முடிவில் நோயால் மரணமடைவதையே காண்கிறோம்.இதை பேரின்ப வாழ்வு என அவர்கள் கூறினாலும் பெரும்பாலானவர்களால் நம்பமுடியவில்லை.

அவர்களை ஞானி என வணங்கமுடிகிறதேயொழிய அவர்களைப்பின்பற்ற  தைரியம் வருவதில்லை.ஏனென்றால் மனைவி, குடும்பம், குழந்தைகளை, வசதிகளை விட்டுவிட்டு கடவுளைக்காண்பதற்க்காக பிச்சையெடுத்து வாழ யாரும் முன்வருவதில்லை.பயம்தான் மிஞ்சுகிறது.

இந்த பயத்தை உடைத்து குடும்பத்திலிருந்துகொண்டே ஆன்மீகத்தில் முன்னேறி ஸித்திகளையும், ஜீவசமாதியையும் அடைய ஒரேவழி கிரியா யோகம் அல்லது வாசியோகம் என்ற விஞ்ஞானப்பூர்வமான பயிற்ச்சியை கற்றுக்கொண்டு எதையும் துறந்து ஓடாமல் அவரவர் வீட்டிலிருந்தபடியே பயிற்ச்சி செய்ய வேண்டும்.

இப்பயிற்ச்சியில் புறச்சடங்குகளில்லை, சாதி, மதம் இல்லை. வெறும்  மனித உடலையும் இயற்க்கையாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி காலையும், மாலையும் அரைமணிநேரம் உங்கள் நலனுக்காக பயிற்சி செய்தாலே போதும்.

இந்த அரைமணிநேர வாசிப்பயிற்ச்சி ஏராளமான நன்மைகளை வழங்கும்.இவ்வாறு பொறுமையுடன், ஞானமடைந்த குருவின் வழிகாட்டுதலுடன் இப்பயிற்ச்சியை செய்தாலேயே போதும்..

இதை அனுபவப்பூர்வமாக அடைந்து நல்வாழ்வு வாழ்பவர்கள் எண்ணிக்கை சமூகத்தில் அதிகமானால் ஆன்மீகம் ஒன்றே சமூகத்தில் நிலைபெற்று இருக்கும்.

பணம் சம்பாதித்து வசதியாக வாழ்ந்து நோய்க்கு விருந்தாகி இறப்போரைவிட, பணமும் சம்பாதித்து, நோய்நொடியின்றி வசதியாகவும் வாழ்ந்து வாசிப்பயிற்ச்சியால் ஜீவசமாதி அல்லது ஒளிஐக்கியமும் அடைபவர்கள்தானே உண்மையிலேயே ஞானிகள்?

. ஆன்மீகம் செழிக்க இறைவன் நமக்கு கொடுத்த நம் உடலெனும் கருவியை செம்மையாக பயன்டுத்தினாலே போதும்.

உடலையும், விலையில்லாமல் இலவசமாகக்கிடைக்கும் காற்றையும் பயன்படுத்தி நோயில்லா,  மரணமிலா,துறவில்லா பெருவாழ்வை அடைய வாசியோகமே வழி

பூப்பறிக்க கோடரி எதற்க்கு?
வாழ்வை வெல்ல வாசி இருக்கு!!!


No comments:

Post a Comment