Wednesday, September 5, 2012

தினம் ஒரு திருமந்திரம்


நியமம் (நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுகுதல்)

ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியை
பாதியுள் மன்னும் பராசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

பொருள் : ஆதியானவனை, நாத வடிவானவனை, ஒளி வடிவானவனை, மூலாதாரத்தில் அக்கினி மயமாகவுள்ளவனை, சித்தினிடம் பிரிப்பின்றி யிருக்கும் பராசக்தியோடு உயிரோடு  உடனாய் உறையும் தர்மத்தை உணர்ந்து ஒழுகுபவனே நியமத்தன் ஆவான். (பாதியுள்-திருமேனிக் கண் ஒரு பதியிதல் எனினுமாய்)

No comments:

Post a Comment