Thursday, May 3, 2012

அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை விசேஷம்


ஒவ்வொரு திதிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத் திற்கும் அதிதேவதைகள், பிரதி அதிதேவதைகள் உண்டு. அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை திதி நித்யா தேவதைகள் என்று தனி தேவதைகள் ஸ்ரீவித்யா ரகசியத்தில் உண்டு. இதுபற்றி லலிதோபாக்யானம், நவாவரண பூஜை முதலியன விரிவாகப் பேசுகின்றன. ஸ்ரீவித்யை உபாசகர்கள், ஒவ்வொரு திதிகளுக் குமுரிய பூஜா முறைகளை அவரவர் குரு சொன்னபடி செய்கின்றனர். இந்த உலகம் இயங்கி வருவது சூரியன், சந்திரன் என்னும் முக்கியமான இரண்டு கிரகங்களால்தான். சூரியனது வெப்பம் இல்லாவிட்டாலும் சந்திரனின் குளிர்ச்சி இல்லாவிட்டாலும் பூமியில் ஜீவராசிகள் வாழ்வது கடினம். பதினைந்து திதிகளும் சூரிய- சந்திரனை வைத்தே வருகின்றன. 27 நட்சத்திரங்களும் இந்த பூமியில் உள்ள அத்தனை ஜீவராசிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளன. நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருத்திகை மட்டுமல்ல; திருவோணம், திருவாதிரை ஆகியவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், ஏகாதசி, சோமவார விரதங்களும் உண்டு. இந்த விரதங் களின் தத்துவம் என்னவென்றால்- குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட தேதி, குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் சேரும்போது தர்மசாஸ்திரத் தின்படி புண்ணிய தினங்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளன. சாதாரண மனிதர் வரும் பொழுது உபசரிப்பதிலும், அதே மனிதன் பெரிய பதவியை ஏற்றுக் கொண்டு வரும்போது உபசரிப்பதிலும் உள்ள வேறுபாடு நமக்கே தெரியும். அதேபோல்தான் திதியும் நட்சத்திரங் களும் ஒன்றோடு ஒன்று கூடும்போது சிறப் பான நிலைகளைப் பெறுகின்றன.

No comments:

Post a Comment