Thursday, July 12, 2012

தினம் ஒரு திருமந்திரம் 12/7


இயமம் (தீது அகற்றல்)
(அஃதாவது அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்பு என்பதாம்)

போதுஉகந் தேறும் புரிசடை யான்அடி
யாதுஉகந் தார்அம ராபதிக் கேசெல்வர்
ஏதுஉகந் தான்இவன் என்றருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் மால்விடை யோனே.

பொருள் : சகஸ்ரதளத்தை விரும்பி எழுந்தருளியிருக்கும் சிவபெருமானது திருவடியை, எல்லாவற்றாலும் விரும்பியவர் விண்ணுலகை அடைவர். உமை காண நடனம் புரியும் இடப வாகன மூர்த்தி இச் சாதகன் எதை விரும்பி வந்தான் என்று அதனை அருள் புரியும்.

No comments:

Post a Comment