Thursday, July 12, 2012

தியானம் என்பது மனம் மூடி அமர்ந்திருப்பது!




பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....

விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் 
ஒரு குகை..

தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.
மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.

குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குளம்படி ஓசை கெட்டது...

சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் 
கடந்தான்...

மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை
என நினைக்கிறேன்...”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை..
அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”

அங்கே பூரண அமைதி...

பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...

மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள்
என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?” 
என்றார்..

தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை;
மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.

மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல்
பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட 
எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல 
விரும்பவில்லை.

தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் 
இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் 
சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.

தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு
காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு
நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?

தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள்
உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்?
மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?

தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி
இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.

தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த
வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யாஎனும்
எழுத்தை எடுத்து விடுங்கள்

No comments:

Post a Comment