Friday, November 30, 2012

ஜென் கதைகள்



அதிசயம்!-
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர்
தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை 
செய்துகொண்டிருந்தார்.அப்போது அங்கே 
ஒரு பூசாரி வந்தார்உள்ளூர்க் கோவிலில் 
வழிபாடு நடத்துகிறவர் அவர்புத்தர்மீதோ 
ஜென்மீதோ அவருக்குநம்பிக்கை இல்லை.
ஆகவேஅவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார்
ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ 
என்றார்.பான்கெய் அவரைக் கண்டிக்கவோ 
மறுக்கவோ இல்லை. ‘ஐயாஉங்களுக்கு என்ன 
பிரச்னை?’ என்றார் அமைதியாக.
எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் 
செய்திருக்கிறதுதெரியுமா?’
தெரியவில்லைசொல்லுங்கள்!’
அவர் நீர்மேல் நடப்பார்தீயை அள்ளி விழுங்குவார்
அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும்,
 நடனம் ஆடினால் பூமியேநடுங்கும்!’ என்றார் பூசாரி
இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் 
புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் 
என்றுஎப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’
நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய்.
 ‘ஆனால்எங்களால் வேறொரு பெரியஅதிசயத்தைச் 
செய்யமுடியும்.’
அதென்ன?’அமைதியாகச் சொன்னார் பான்கெய
யாராவது தப்புச் செய்தால்எங்களுக்குத் துரோகம்
 இழைத்தால்அவமானப்படுத்தினால்அவர்கள்மீது
எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் 
முழுமையாக மன்னித்துவிடுவோம்!

இரண்டு கண்கள்
ஒரு ஜென் மாஸ்டர்அவரைச் சந்திக்க இளைஞன் 
ஒருவன் வந்தான்வணக்கம் சொன்னான். ‘ஐயாஎனக்கு ஒரு சந்தேகம்’ என்றான்.
என்ன சந்தேகம்?’
எனக்குப் பெரிய வாள் வீரனாகவேண்டும் என்று 
ஆசை’ என்றான் அந்த இளைஞன். ‘அரசரின் கையால் பரிசும் பாராட்டும்வாங்க
வேண்டும்அப்புறம் நான் அவருடைய  படையில்
சேரவேண்டும்பல போர்களில் ஜெயித்துச் 
சரித்திரத்தில் இடம்பிடிக்கவேண்டும்
என்றெல்லாம் கனவு காண்கிறேன்தப்பா?’
தப்பில்லை’ என்றார் ஜென் மாஸ்டர். ‘ஆனால்
உனக்கு வாள்வீச்சு எந்த அளவு தெரியும்?’
இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்!’
ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் தங்களுடைய 
இலக்கைக் கற்பனை செய்து சந்தோஷப்படுவது 
இயல்புதான்’ என்றார் 
அந்த ஜென் குரு. ‘ஆனால் ஒரு விஷயம் 
புரிந்துகொள்உனக்கு உள்ளது இரண்டே கண்கள்
அதில் ஒன்றை இலக்கின் மீது வைத்துவிட்டால்
பாதையில்கவனம் பாதியாகிவிடும்
அதற்குப் பதில் இரண்டு கண்களையும் இங்கே 
திருப்பினால்நீ விரும்பும் இலக்கைச் சீக்கிரம் 
சென்றுஅடையலாம்புரிகிறதா?’

No comments:

Post a Comment