Friday, November 30, 2012

மெளனத்தில் விளைந்த முத்துகள்



ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கலாம்,
ஆனால் அதற்குக ஒரே பதில்தான்
உனது விழிப்புணர்வு.
v வாழ்க்கை என்பது இறுக்கம் அல்ல.
மனித மனங்களை தவிர.
v வாழ்க்கை எப்படியோ அப்படியே ஏற்றுக்கொள்.
வேறு ஏதாவதாக மாற்ற முயற்சிக்காதே.
v நீ நீதான். உன்னுடன் ஒப்பிடக்கூடியவர் யாருமில்லை.
v வாழ்வை இந்த ஒரு கணத்தில் முழுமையாக
வாழ்வது எப்படி என்று
உனக்கு தெரிந்துவிட்டால் இந்த வாழ்வின் முழு
இரகசியமும் உனக்கு தெரிந்துவிடும்.
v வாழ்க்கை அர்த்தமுள்ளதுமல்ல,
அர்த்தமற்றதுமல்ல. வாழ்க்கை ஒருவாய்ப்புதான்,
ஒரு வாசல்தான்.
v கொடுப்பவனாக இரு. உன்னால் கொடுக்கமுடிந்ததை பகிர்ந்துகொள்.
v அன்பு பயத்திற்கு நேர் எதிர் துருவமாகும். வாழ்வு
அன்பின் அடிப்படையில் இருக்கவேண்டும், பயத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது.
v இந்த கணமே நீ அனைத்து பிரச்சனைகளையும் விட்டுவிடமுடியும்
 ஏனெனில் அவை நீ உருவாக்கியவைதான்.
v தேடுதல் அழிவற்றதை நோக்கியதாகஇருக்கவேண்டும்
மேலும் ஒவ்வொருவருக்கும் அழிவற்றதை
அனுபவப்படகூடிய ஆற்றல் இருக்கிறது.
v ஒவ்வொரு எண்ணமும் விடப்படவேண்டும்.
அது நல்லதோ கெட்டதோ அது முக்கியமல்ல.
v எல்லா பயங்களுடனும் அறியாத்தின் சவாலை
ஏற்றுக் கொள்வதே தைரியம். பயம் அங்கிருக்கும்,
ஆனால் திரும்ப திரும்ப அந்த சவாலை 
ஏற்றுக்கொண்டால் மெதுமெதுவாக அந்த பயங்கள் மறைந்துவிடும்.
v உனது பிரச்சனைகளை மற்றொரு முறை நன்றாக
பார். நீ ஆழமாக பார்க்க, பார்க்க அவை சிறிதாக தெரியும்.
v நீ ஒரு ரோஜாவா, தாமரையா, அல்லியா என்பது
ஒரு விஷயமே அல்ல.நீ மலர்கிறாயா என்பதுதான்
பிரச்சனை.
v இறந்த காலமும் கிடையாது, எதிர்காலமும் கிடையாது,
இந்த கணம் மட்டுமே உள்ளது நீ எப்படி எதனோடு எதனை ஒப்பிடுவாய்.
v ஆசை உள்ளே நுழையும்போது படைப்பு மறைந்துவிடுகிறது.
v உனது உடலுடன் ஏதாவது செய்யும்போது உனது உடல் சொல்வதைகவனி.

No comments:

Post a Comment