Monday, March 11, 2013

தினம் ஒரு திருமந்திரம் 11-03-2013


               மலையார் சிரத்திடை வானீர் அருவி
               நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
               சிலையார் பொதுவில் திருநட மாடும்
                தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

பொருள் :
மலைபோன்ற சிரசினிடை ஆகாயகங்கை எப்போதும் பாய்ந்து கொண்டேயிருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாகச் சென்று, பரநாத ஒலிகூடிய சிற்சபையில் ஆனந்தக் கூத்தாடும் அகலாத ஆனந்தத்தை  நல்கும் சோதியைத் தரிசித்தேன்.

No comments:

Post a Comment