Monday, March 11, 2013

வாந்தி மற்றும் ஜுரம்


தலைவலி மற்றும் வாந்தி என்பது ஒரு வியாதியின் அறிகுறியே ஆகும்... ஆனால் இங்கு பெரும்பாலும் இவற்றை மறக்கடிக்க மருந்து எடுத்துக் கொள்ளப் படுகிறதே தவிர இந்த வாந்தியும் தலைவலியும் வருவதற்கு காரணமான வியாதியை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பது குறைவே ஆகும்... இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க நாம் மருத்துவம் படித்திருக்க வேண்டும்... ஆகையால் தலைவலி அல்லது வாந்தி வந்தால் சிறந்த மருத்துவரை சந்திப்பது நல்லது...

வாந்தி வரும் நோயாளிகளுக்கு மருந்தை மாத்திரையாய் கொடுத்தால் உபயோகமில்லை என்ற காரணத்தாலும், சில மருந்துகள் மாத்திரை வடிவத்தில் தர முடியாது என்ற காரணத்தினாலும் ஊசி மருந்து பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அனைத்து வியாதிகளுக்கும் ஊசி போட்டு கொண்டால் மட்டுமே குணமாகும் என்ற எண்ணம் படிக்காதவர்கள் மத்தியில் மட்டும் அல்ல படித்தவர்கள் மத்தியிலும் உள்ளது... மிக சிறந்த மருத்துவர்கள் மட்டுமே அனைத்து நோயாளிகளுக்கும் ஊசி போடுவதில்லை... முக்கியமாக ஜுரம் வந்த குழந்தைகளுக்கு ஊசி போடுவது உடல் சூட்டை உடனே குறைக்க உதவுவதால் சில சமயங்களில் பின்விளைவுகள் வருவதற்கு வழி வகுக்கும் [ஆதாரம் தேவைபடுகிறது].  அடிக்கடி ஊசி போட்டு கொள்வதால் நரம்பு மண்டலம் பாதிக்கப் படும் அபாயமும் உள்ளது..

ஜுரம் என்பது என்ன?
நம் உடலில் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் நுழையும் பொழுது அதை ஒழித்துக் கட்ட நம் உடலின் எதிர்ப்பு சக்தியானது நம் உடல் வெப்பத்தை அதிகரித்து அந்த கிருமிகளை கொள்ள பார்க்கிறது.

No comments:

Post a Comment