Thursday, February 6, 2014

தினம் ஒரு திருமந்திரம் 06-02-2014

எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொன்னாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண் ணாயிரம் வேண்டிலே.

பொருள் : எண்ணப்படுகின்ற ஆகர்ஷண முறையாவது ஏட்டில் உகாரத்தையிட்டு, எண்ணுதற்கு அருமையான வியாழக் கிழமைகளில் வெள்ளிப் பொடிப் பூசி, வெண்ணாவல் பலகையில் வைத்து மேற்கு நோக்கி பிரணவத் தியானம் எண்ணாயிரம் செய்க. (கருடணை - என்றும் பாடம். ஒப்பாம் நிலைமை - என்று பொருள்.)

No comments:

Post a Comment