Monday, April 1, 2013

தினம் ஒரு திருமந்திரம் 01-04-2013


          முக்குணம் மூடற வாயுவை மூலத்தே
          சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
          தக்க வலம்இடம் நாழிகை சாதிக்க
          வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே

பொருள் : தாமத இராசத சாத்துவிகம் என்ற முக்குணங்களாகிய இருள்நீங்க மூலாதாரத்திலுள்ள அபானனை மேலெழும்படி செய்து, வலப்புற சூரிய கலையை இடப்புறமுள்ள சந்திர கலையோடு பொருந்தும்படி அதிகாரையில் ஒரு நாழிகை பயின்றால் உயிரை உடம்பில் அழியாது சிவன் வைப்பான். (உயிர்நிலை- உடல்)

No comments:

Post a Comment