Tuesday, April 30, 2013

தினம் ஒரு திருமந்திரம் 30-04-2013



வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்நிற வாவிடின் கோழையும் ஆமே.

பொருள் : வாய்திறவாமல் மௌனமாக இருப்பவரது மன மண்டலத்தில் பிராணனாகிய செல்வம் ஒன்றுள்ளது. அங்ஙனமின்றி வாய்திறந்து பேசிக் கொண்டிருப்பவர் பிராணனை வெளியிட்டு வீணாக்குபவர். பேசாத மௌனியர் மதிமண்டலத்தில் பிராணனைச் செலுத்திச் சோதியை அறிகின்றனர். சகஸ்ரதளமாகிய செப்பினைத் திறந்து பார்க்க வல்லமையற்றவர்கள் கோழைத்தனம் உள்ளவராவர். (கோய்-நகை வைக்கும் செப்பு)

No comments:

Post a Comment