Wednesday, June 12, 2013

இந்துத்துவம்- II

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டி ருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட் டோம்.
குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளை வுகள் என்ன சம்பவித்தன? என்பதுபற்றி இப் போது பார்க்கலாம்.
சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோ தராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக் கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.
- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட் டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார்.
வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.
எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந் தனர் மக்கள்.
ஏன் அக்னிப் புகை...?
பிராமணர்கள் சொன்னார்கள், ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண் டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண் ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன் னார்கள்.(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்க ளுக்கு எழலாம். பசு என் றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்க மாகி விட்டது. தமாஷுக் காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூற லாம்).
அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங் களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட் டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டி ருக்கிறது என்றும் தெரிய வில்லை.
புத்தர் இதை பார்த் தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத் திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.
அப்போதுதான் அசு வமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங் களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்?
ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.
ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார் கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட் டுப் பெண்கள் முக்கிய மாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண் டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.
இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோ கமே அப்படித்தானே இருக்கிறது.
அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே...
என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதி ரையை ராஜாவின் பத் தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார் கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.
மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட் டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய் தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொரு ளும் தட்சணை கொடுத் தாய். அஃதோடு யாகத் தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும என் றார்களாம்.
இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம் மிருக காருண்யம் இரண் டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?
என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள் விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: குதி ரைக்கு மோட்சம் கிடைக் கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும் என்று.
புத்தர் திரும்ப கேட் டார்.
ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராம ணனாகிய நீங்கள் மோட் சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத் தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக் கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள் வியை புத்தர் பரப்ப... திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.
பிறகு...?

தொடரும்...

No comments:

Post a Comment