Saturday, June 29, 2013

தினம் ஒரு திருமந்திரம் 29-06-2013


கலந்த உயிருடன் காலம் அறியில்

கலந்த உயிரது காலின் நெருக்கம்

கலந்த உயிரது காலது கட்டின்

கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.


பொருள் : உடலில் உயிர் கலந்துள்ள கால எல்லையை அறியின் அக்கால எல்லை பிராணன் இயக்கத்தால் அமைந்துள்ளது. அத்தகைய உயிரில் பிராணனது இயக்கத்தைக் கட்டி நிறுத்திவிட்டால் உயிருடன் பொருந்திய காலமும் அழிவின்றுட நிற்கும். ஆயுள் நிலைத்து நிற்கும் என்றபடி.

No comments:

Post a Comment