Thursday, December 22, 2011

சில ஆன்மீக குறிப்புகள்


ஹோமத்தில் சில்லரை நாணயங்களைப் போடுகிறார்களே. பணம்
 லட்சுமியின் அம்சமாயிற்றே. இது சரிதானா?
ஹோமத்தில் இருக்கும் அக்னியும் தெய்வாம்சம் தானே! மூலவர் 
பூஜையில் சுவர்ண புஷ்பம் என்று நாணயங்களைச் சமர்ப்பிக்கிறோம். 
அதுபோல, ஹோமத்தில் அக்னி வடிவில் இருக்கும் தெய்வத்திற்கும் 
சுவர்ண புஷ்பமாக நாணயங்களைப் போடுகிறோம்.

* நவரத்தின மோதிரம் அணி வதைப்பற்றி விளக்கம் அளியுங்கள்..
மோதிரத்திற்கு "அங்குலீயகம்' என்று பெயர். இதற்கு "விரலுக்கு அணி
விக்கப்படும் ஆபரணம்' என்று பொருள். எல்லா தெய்வங்களுக்கும் 
எல்லாக் கற்களும் உகந்தவை தான். சுவாமியை பிரதிஷ்டை செய்யும் 
முன் பீடத்தில் நவரத்தினங்கள் வைக்கப்படுகின்றன. கும்பாபிஷேக 
கலசம், திருவாபரணங்களிலும் இவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு. 
அவரவர் விரும்பும் கற்களில் விருப்பமான முறையில் மோதிரம் 
அணிந்து கொள்ளலாம். அவை தீங்கு ஏதும் விளைவிக்காது. சுவாமி 
முன்பு வைத்து வணங்கியபிறகு அணிந்து கொள்ளுங்கள்.

* பழைய கோயில்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம், 
இருந்தாலும் புதிய கோயில்களைக் கட்டுவது ஒரு வியாபார 
உத்திதானே?
எல்லோரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. முன்பிருந்த 
மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை என்பது வேறு. 
தற்போதுள்ள மக்கள் தொகை, அவர்களின் வாழ்க்கை முறை 
என்பது வேறு. முன்பு ஒரு கோயிலைச் சுற்றி ஓரு ஊர் 
அமைந்திருக்கும். இன்று மக்கள் தொகை பெருகி புதிது 
புதிதாக நகர்களும் ஊர்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. 
அவசரமான, பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருப்பவர்கள் 
தொலை தூரம் சென்று கோயிலை தரிசிக்க இயலாமல் போய் 
விடுகிறது. எனவே அப்பகுதியில் வாழும் மக்கள் தினமும் 
தரிசித்து வழிபட தங்கள் பகுதிக்கென்று ஒரு கோயிலை 
அமைத்துக் கொள்வது இன்றியமையாததாகிறது.

* கோயில்களில் உள்ளது போல் வீட்டிலும் விக்ரஹ 
பூஜை செய்யலாமா?
கோயில்களில் பூஜை செய்வது போல் வீட்டிலும் செய்ய 
முடியுமானால் விக்ரக பூஜை செய்யலாம். விக்ரகங்களின் 
உயரம் ஆறு அங்குலத்திற்கு அதிகமில்லாமல் இருக்க வேண்டும். 

** விழா நாட்களில் முதல்நாள் இரவே வாசல் தெளித்து 
கோலம் போட்டு விடுகிறார்களோ? இது சாஸ்திரப்படி 
சரிதானா?
சூரிய உதயத்திற்கு ஒன்றைமணி நேரம் முன்பு தான் வாசலைத் 
தூய்மை செய்து சாணம் தெளித்து கோலமிடவேண்டும் என்று 
சாஸ்திரம் கூறுகிறது. முதல்நாள் இரவே கோலமிட்டு விட்டு 
தூங்கிவிடுவது அவ்வளவு உசிதமானது அல்ல. அதிகாலையில் 
கோலம் இடும் வீட்டிலே திருமகள் நித்யவாசம் செய்வாள்.
 இப்போது பிரம்மாண்டமான கோலங்களை எல்லாம் முதல்
நாள் இரவே வாசலில் இட்டு அசத்துகிறார்கள். ஆனால், 
கூடியமட்டும் காலை நேரத்திலே வாசல் தெளித்து கோலமிடுங்கள்

No comments:

Post a Comment