Friday, December 23, 2011

அகத்தியமகரிஷியை தரிசிப்பது எப்படி?




நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 
முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் 
ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி
அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் 
இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து
விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 
108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை 
நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,
இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;
ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.
அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் 
சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்
செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் 
வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற 
உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,
45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.
அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய 
தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,
முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.
பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் 
வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில்
 தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் 
பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் 
தரிசனம் கிட்டும்.முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய 
வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில்
கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும்
ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் 
அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக 
ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.
அதை விட பிறவிப்பயன் வேறில்லை;

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வணக்கம். நானும் இந்த மந்திரத்தை பலதடவை1008(45) கூறியும் எனக்கு தரிசனம் தரவில்லை.

    அகஸ்தியர் கூறும் சகல பாவம் போகும் மந்திரம்உரு கொடுத்தான்
    எனக்கு தரிசனம் கிடைக்கவில்லை.
    இதைபோல் சிலரும் கூறி இருக்கிண்டன்ர் அதாவுது வேறு மந்திரங்கள்
    01"ஓம் கலீங் சிவாய நம" இதையும் உரு கொடுத்தேன்
    02 இப்பொது உரு கொடுக்க இருக்கிறேன்
    ஓம் சிங் ரங் அங் சிங்

    இதையல்லாம் நான் முறை படிதான் செய்கிறேன் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை!
    காரணம் என்னவென்று தெரியவில்லை!

    நான் இப்பொது என்ன செய்யவேண்டும்?
    எனக்கு இப்பொது வேலையும் இல்லை பல மாதமாக நான் வீட்டில் தான் இருக்கிறேன்.
    வேண்டாத தெய்வம் இல்லை. எனக்கு யாரும் உதவியம் இல்லை.

    எல்லா குரைகலையும் என் குரு வான அகஸ்தியர் பாதத்தில்தான் சமர்பித்து இருக்கிறேன்.

    எனக்கு வேலை கிடைத்து நான் முன்னேரே ஏதாவுது வழிகூறுங்கள்/

    ஏதாவுது பிழை இருந்தால் மன்னியுங்க

    நான் மோகன்/

    ReplyDelete
  3. மந்திரம் தவறு.மந்திரங்களை வெளியிடு முன் நன்றாக சோதித்து பின் வெளியிடுங்கள்.ஏன் என்றால் பெரும் ஆர்வத்துடன் ஒருவர் லக்ஷம் உருவுக்கு மேல் ஏற்றியும் பலன் இல்லை என்றால் அவர் உழைப்பின் சாபம் நமக்கு வந்து சேரும்.நான் பார்த்தவரை அனைத்து வெப்சைட்களிலும் மந்திரம் தவறாகவே உள்ளது.

    ஓம் சிம் வம் அம் உம் மம் அகத்தீசா

    என்பதுதான் சரியான மந்திரம்.ஆதாரம் :

    பூரண சூத்திரம் 216 ல் 44 வது பாடல்

    ReplyDelete
    Replies
    1. ஆம் நீங்கள் கூறுவது மிகச்சரியே.

      Delete
  4. ஓம் சிம் வம் அம் உம் மம் அகத்தீசா இந்த வரிகள் மட்டும் போதுமா?

    ஓம் சிம் வம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
    என் குருவே வா வா வரம் அருள்க
    அருள் தருக அடியேன் தொழுதேன்.
    அனைத்துவரிகளும் வேண்டுமா?

    ReplyDelete