Wednesday, July 3, 2013

தினம் ஒரு திருமந்திரம் 03-07-2013

தூய்மை அருள்ஊண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமிஈர் ஐந்தும் நியமத்த னாமே.

பொருள் : தூய்மை, கருணை, சுருங்கிய உணவு, பொறுமை, நேர்மை, வாய்மை, உறுதியுடைமை யாகியவற்றை வளர்த்தலும், ஏனைய காமம், களவு கொலை யாகியவற்றைத் தீமையெனக் காண்டலுமாக நியமநெறியில் நிற்பவன் பத்துக் குணங்களைக் கொண்டவனாவான். (நேமி-நியமத்தை உடையவன், காதல் உயிரின் மாட்டும் காமம் உடம்பின் மாட்டும் செல்வன.)

No comments:

Post a Comment