Monday, November 4, 2013

தினம் ஒரு திருமந்திரம் 04-11-2013

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

பொருள் : 
தங்கள் உள்ளத்தே சிவலோகத்தையும், சிவத்தோடு அத்து விதமாய் பொருந்தி நிற்பதாகிய யோக நிலையையும் இவ்வாறு பொருந்தி நிற்றலால் அனுபவிக்கும் சிவபோகமாகிய பேரின்பத்தையும் தூங்காமல் தூங்குவதாகிய ஆனந்த நித்திரையில் கண்டார்கள். இவர்கள் எய்திய நிலையானது மனவாக்குக்கு எட்டாதது. ஆதலான் எவ்வாறு சொல்வது ?

No comments:

Post a Comment