Sunday, November 17, 2013

தினம் ஒரு திருமந்திரம் 17-11-2013

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பொருள் : 
அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல- தனித்தனியான இரண்டு என்று சொல்லுபவர்கள் அறிவில்லாத மூடர்கள். அன்பே சிவம் என்பதை பலரும் அறியாதிருக்கிறார்கள் .  அன்பு தான் சிவம் என்பதை எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவமான சிவமாய் அமர்ந்திருப்பர்கள்-வாழ்ந்திருப்பார்கள். (அமர்ந்திருப்பதாவது ஆனந்த வெள்ளத்தில் திளைப்பது)

No comments:

Post a Comment