Monday, November 11, 2013

தினம் ஒரு திருமந்திரம் 11-11-2013


திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தமென்று எண்ணி அறையில் புதைத்துப்
பொருத்தம்இல் லாத புளிமாங் கொம்பேறிக்
 கருத்துஅறி யாதவர் காலற்ற வாறே.

பொருள் : செப்பமாக வளர்த்த மரத்தினின்றும் பெற்ற இனிய மாம்பழத்தைச் சேமிப்புப் பொருளாக எண்ணி அறையில் வைத்துவிட்டு, தகுதியில்லாத புளியம் பழத்துக்காகப் புளியங் கிளையில் ஏறி, ஆலோசனை யில்லாதவர் பிராணசத்தி குறைவுற்று வருந்துகின்றாரே !

No comments:

Post a Comment