Thursday, November 7, 2013

தினம் ஒரு திருமந்திரம் 07-11-2013

தன்னது சாயை தனக்குத் வாதுகண்டு
என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள்
உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காணொளி கண்டுகொ ளீரே.

பொருள் : 
தன்னோடு பொருந்திய நிழல் தனக்கு உதவாதது கண்டும் அறிவில்லாதவர்கள் தமக்கு வேறாகவுள்ள செல்வம் தமக்கு உதவும் என்று எண்ணுவார்கள். உடலோடு ஒன்றாக வந்தது உன்னுடைய உயிர். எனினும் உயிர் போகும்போது உடல் அழிந்து போகும். அகக்கண் இடமாக விளங்குகிறது நிலையான ஒளி. அதனை உடம்பு உள்ளபோதே நாடிக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment