Saturday, October 12, 2013

தினம் ஒரு திருமந்திரம் 12-10-2013

சமாதி யமாதியில் தான்செல்லக் கூடும்
சமாதி யமாதியில் தான்எட்டுச் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க்கு அன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொருள் : இயமம் முதலியவைகளைக் கடைப்பிடித்து சமாதிவரை செல்லும் முறைமையைச் சொல்லக் கேட்டால், இயமம் முதல் சமாதிக்கு முன்னுள்ள அங்கங்கள் கடைப்பிடிக்கப்படின், எட்டாவதான சமாதி கைகூடும். இவ்எட்டு உறுப்புக்களையும் நியமமாகச் செய்து வருபவர்க்கு அட்டாங்க யோகத்தின் இறுதி உறுப்பான சமாதி கைகூடும்.

No comments:

Post a Comment