Tuesday, October 15, 2013

தினம் ஒரு திருமந்திரம் 15-10-2013


உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்தும்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.


பொருள் : ஆறு ஆதாரங்களில் தோன்றுகின்ற ஐவகை அக்கினியும் வணங்குகின்ற பிரகாசத்தோடு கூடிய நீல ஒளியை அகன்று, இயக்குகின்ற பஞ்ச தன்மாத்திரைகளில் ஒன்றாகிய சததம் ஒடுங்க, பொன்னொளியில் விளங்கும் இறைவனது திருவடியை அடையலாம், ஆறு ஆதாரங்களாவன; மூலம், கொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு என்பனவாம்.

No comments:

Post a Comment