Wednesday, October 30, 2013

தினம் ஒரு திருமந்திரம் 30-10-2013

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு முனைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருவழி யோர்க்கே.

பொருள் : சிறந்த குண்டலினியாகிய அங்கியின் கீழே சுழுமுனை நாடியைச் செல்வச் செய்து, வாங்கிச் சூரிய கலையில் இயங்கும் பிராணனைச் சந்திர கலையில் ஓடும்படி செய்து ஏழ் உலகங்களையும் தாங்கிட யோக நெறி நிற்போர்க்குச் சொன்னோம்.

No comments:

Post a Comment