Thursday, October 31, 2013

தினம் ஒரு திருமந்திரம் 31-10-2013

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை அதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசன் உணரவல் லார்க்கே.

பொருள் : இறைவனது இயல்பும், தேவர் குழாச் சேர்க்கையும், பாசத்தின் இயக்கமும், பாசத்தை விட்ட உயிராய் நிற்பதும் நாதமாகும். அதனை உணர வல்லார்க்கு பூவினில் வெளிவரும் கந்தம் போல ஈசன் நாதத்தில் விளங்குகிறான் என்பது புலப்படும்.

No comments:

Post a Comment