Saturday, October 12, 2013

Anxiety Disorder (கவலைக் கோளாறுகளைப் புரிந்து கொள்ளுங்கள்)

கவலையும் கவலைக் கோளாறுகளும்

உறுதியின்மை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை. வேலையை இழுத்தல், போக்கு வரத்து நெரிச்சலில் சிக்கிக் கொள்ளுதல், தேர்வுகள் சமீபத்தல் முதலான மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது நாம் கவலை அடைகிறோம்.

ஒரு மலை உச்சியிலிருந்து கீழே பார்த்தல், குறைத்த வாறு மேலே பாயவரும். நாயைக் காணுதல் போன்ற திடீர் என்று எதிர்பாராத அச்சுளுத்தல்கள் ஏற்படும்போது அச்சம் உண்டாகிறது. சிறிதளவு கவலை கொள்ளுவது நன்மையுடைத்ததே, ஏனெனில் அது நமது செயல்களை மேம்படுத்தவும், எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைவதற்கும் உதவும்.

கவலை தீவிரமடையும்போதும், நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்யும் திறமையில் குறுக்கிடும் அளவுக்கு நீடிக்கும்போதும் கவலைக் கோளாறுகள் ஏற்படுகின்றன. எல்லாவித மனக்கோளாறுகளும் அடிப்படையானது கவலைக் கோளாறாகும். பெரும்பாலானோர் இதைக் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. ஒருவத்தனது மனத்திண்மையைப் பயன்படுத்தினால் அந்தக் கவலைக் கோளாற்று அறிகுறிகளை அவரால் அடக்கிவிட அந்தக் கவலைக் கோளாற்று அறிகுறிகளை அவரால் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறார்கள். மருத்துவம் செய்யவேண்டுமே தவிர, அறிகுறிகள் போக வேண்டும் என்று விரும்புவது சரியானதல்ல.
சாதாரண கவலைக் கோளாறுகள் எவை ?

சாதாரண கவலைக் கோளாறுகள் பலவகைகள் உள்ளன. எனினும் இங்குப் பொதுவாக வரும் பொதுவகை திகில் கோளாறுகள் அச்சக் கோளாறுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன.1. பொதுவகை திகல் கோளாறுகள்

ஜெனரலைஜ்ட் ஆங்க்ஜைடி டிஸார்டர் (GAD) என்பது தூண்டுதலற்ற, நாட்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட கவலை, மன உளைச்சலாகும். GAD உள்ள நோயாளிகள், பெரும் அழிவேதோ வரப்போவதாக எதிர்பார்ப்பார்கள். தங்கள் உடல் நலன் குறுத்தும், பணம், குடும்பம், பணி முதலியவற்றைக் குறித்தும் அளவுக்கதிகமாக கவலையுளுவார்கள். கவலை என்பது பகுத்தறிவுக்கு முரணானது எந்பதை உணர்ந்தாலும் கவலைத் துறக்க முடியாமலும் அமைதியோடு ஓய்வெடுக்க முடியாமலும் தவிப்பார்கள். இவர்களுடைய கவலை, நடுக்கம், வலிப்புநோய், சதை இறுகல், தலைவலி, முன்கோபம், முறைத்துப்பார்த்தல் முதலான உடல் அறிகுறிகளுடன் இணைந்து வரும்.

அவர்கள் தலைச்சுற்றல், மூச்சுத்திறைல், குமட்டல் முதலியவற்றை உணர்ந்து அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வார்கள். பொதுவாக, GAD யுடன் கூடிய ஊறுகள் குறைவானதே. இக்கோளாறுகளுடைய மக்கள் சமூக கட்டமைப்பில் செய்யும் பணியில் கட்டுப்பாடு எதையும் உணரமாட்டார்கள் எனிறும் தீவிரமடைந்தால், GAD தளர்ச்சியை உண்டாக்கி சாதாரண அன்றாட பணிகளைக் கூட செய்ய இயலாதவாறு செய்துவிடும்.2. அச்சக் கோளாறுகள்

அச்சக் கோளாறுகளுடைய மக்கள், எந்த வித முன்னறிவிப்பு மின்றி திடீரென அடிக்கடி வரும் அச்ச உணர்வுடன் இருப்பார்கள். அந்த உணர்வு எப்போது உண்டாகும் என்பதை முன்மதிப்பிடு செய்ய இயலாதவர்கள். ஒவ்வொரு அச்ச உணர்வுகளுக்கும், நிகழ்வுகளுக்கும் இடையே தீவிர கவலை யடைவார்கள். அடுத்த அச்ச உணர்வு, நிகழ்வு ஏற்படுமோ எனஅற கவலையுடனேயே இருப்பார்கள். இந்தத் தாக்கு தல்களுக்கு இடையே, எந்த நிமிடத்திறும் அடுத்த தாக்குதல் ஏற்படக்கூடும் என்ம் தொடர்ந்த வலையுடனேயே இருப்பார்கள்.

அடுத்த அச்சமூட்டும் செயல் ஏற்பட்டதும் அவர்களுடைய இதயம் சுமையாகிவிடும். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டும் மயக்கம், தளர்ச்சி, தலைச்சுற்றல் ஏற்படும். அவர்களுடைய கைகள் துச்செறியும் அல்லது மரத்துப்போகும். வியர்த்துக் கொட்டி சில்லிட்டுப் போகும். மார்பில் உலைச்சல் உணர்வு, திக்குமுக்காடுதல், பொய்மை உணர்வு, எல்லாமே ஊசிலாடுவது போன்ற அச்சம், கட்டுப்பாட்டுத் தன்மை இழுப்பு போன்றவையும் இருக்கும். தனக்கு, இதயத்தடை ஏற்படுவதைப் போலவும், மனக்குன்றல் இருப்பதாகவும், தான் மரணத்தின் விளிம்பில் நிற்பதாகவும் நோயாளி முழுமையாக நம்புவார். பொதுவாக இந்த அச்ச உணர்வுத் தூக்கம் ஏறத்தாழ இறண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும். சில சமயங்களில் பத்து நிமிடங்கள் வரையில் கூட இருக்கலாம். மிகவும் அரிதாக, ஒரு சிலரிடம் ஒரு மணி, அதற்குமேலும் நீடிக்கலாம்.

அச்சக்கோளாறு பெரும்பாலும் மனச்சோர்வு, மதுவுக்கு அடிமை முதலான தன்மைகளையும் உடன் பெற்றிருக்கும். அவை தன்மைகள் பலவகை அச்சக்கோளாற்று உணர்வுகளாக (phobia) மாறும். ஒரு அச்ச உணர்வுத்தாக்கம் ஏற்பட்டால், செய்வதறியாமல் தடுமாற வைக்கும். எந்தச் சூழ்நிலையும் அவர்கள் விலக்கு வார்கள். அத்தகைய அச்சக்கோளாறுகளுடை மக்களில் மூன்றில் ஒரு பங்குனருக்கு வாழ்க்கையே மிகவும் முறையற்றதாக மாறிவிடும். இந்த நிலையை திடல் மருட்சி (agoraphobia) (அதாவது பொது இடங்களுக்கு, மக்கள் இடையே போதலில் அச்சம்) என்பார்கள்.3. பல்வகை அச்சக் கோளாற்று உணர்வுகள் (Phobia)

இவை பல்வகை வடிவங்களில் ஏற்படும் இவை (Phobia) அளவுக்கதிகமாக அச்ச உணர்வுகள் மட்டுமல்ல, பருத்தளிவுக்கு ஒவ்வாதவை. அச்சத்தூக்குக் காரணமான பொருட்களை விலக்குவது எளிதென்றால், இந்த அச்சக் கோளாற்று உணர்வுகளுடைய மக்கள் மருத்துவம் கோர வேண்டிய தேவையை உணரமாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட அச்சக் கோளாற்று உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, சூழ்நிலையைக் கண்டு அஞ்சுவதாகும். பலர் ஏதோ ஒரு பொருளையோ, சுழ்நிலையையோ கண்டு, குறிப்பிட்ட தீவிரமான, காரணமற்ற அச்ச உணர்வைப் பெறுவார்கள் நாய்கள், சுற்றிலும் அடைப்புள்ள இடங்கள், உயரம், இயங்கும் படிக்கட்டுகள் (esculator), சுரங்கங்கள், நீர், விமானப்பயணம், இரத்த காயங்கள் போன்றவை மிகச் சாதாரணமான சில உதாரணங்களாகும்.

சமுதாய அச்சக்கோளாற்று உணர்வு என்பது சமுதாயச் சூழ்நிலைகளில் தனக்குத் தாழ்வு ஏற்பட்டு விடுமென்று, முக்கியமாக மற்றவர்கள் எதிரில் தனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று ஒருவர் தீவிரமாக அஞ்சுவதாகும். சிறிய தவறுகளை கூட அவற்றின் உண்மை நிலைக்குப் புறம்பாக மிகைப்படுத்திக் காணப்படும். நாணமுற்று முகஞ்சி வழ்பது அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் வருந்துவதைக் காட்டும் இப்படி வருந்துபவர்கள் மற்ற அனைவரின் பார்வையும் தன் மிதே குவிக்கப்பட்டிருப்பதாக நினைப்பார்கள். சொற்பொழிவு தர வேண்டிய நிலை, முதலாளியுடனோ, பிற உயர் அதிகாரிகளுடனோ பேச, சந்திக்க நேரிடும் நிலை ஏற்படும்போது இவர்கள் கொள்ளும் அச்ச உணர்வு வெட்ட வெளிச்சமாகத் தெரியும். சமுதாய அச்சக் கோளாற்று உணர்வு அவர்களுடைய அன்றாட வழக்கமான வாழ்வைப் பெரிதும் பாதிக்கும் அது அவர்கலுடைய தொழிலில், சமூக உற்றகளில் தலையிடும். அச்சக் கோளாறுகளைப் பெரிதும் உடன்பெற்றிருக்கும் திடல் மருட்சி (Agora Phobia) என்பது அச்சத்தாக்குதலை உண்டு பண்ணும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தான் இருப்பதாகவும், அத்தகு சூழ்நிலையிலிருந்து தன்னால் தப்புவது மிகவும் கடினம் அல்லது தப்பவே முடியாது ª ன்று தீவிர அச்ச உணர்வு கொள்வதாகும்.

இத்தகு அச்சக் கோளாற்று உணர்வுடைய மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெகு தூரம் பயணம் செய்ய அஞ்சுவார்கள். அச்சத்தாக்குதல் (Panic attack) ஏற்பட்டு விடும் என்றும் அதிலிருந்து தப்ப இயலாது என்றும் அத்தகு நிலையில் உதவி பெறுவது கடினம் என்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவும், உதாரணமாக புகைவண்டி, இயங்கும் படிக்கட்டு, ஆகாய விமனம் மதலியவற்றில் பயணம் செய்யவும் அஞ்சி நடுங்குவார்கள்.
கவலையின் அறிகுறிகள்

கவலையின் அறிகுறிகள்1. மன நிலை அறிகுறிகள்
மனக்கிளர்ச்சி
கவலையூட்டும் எண்ணங்கள்
அமைதியின்மை
இரைச்சலைக் கேட்க விரும்பாமை
மன உலைவு
சரியாக எதிலும் மனத்தை ஒரு முகப்படுத்த முடியாமை
முன்கோபம்2. உடல் நிலை அறிகுறிகள்
தலைசுற்றல்
இதயத்துடிப்பு அதிகரித்தல்
தலைவலி
குடல் இரைச்சல்
தசை வலி
அஜீரணம், செரிக்காமை
உடல் நடுக்கம், மூச்சுத் தினாறல்
அடிக்கடி சிறுநீர் கழிதல்
உணர்ச்சிகளில் பெருமாற்றங்கள்
வயிற்று இரைப்பை உலைவு
பேதியாதல்
கை, கால்கள் மரத்துபோதல், மார்பு உலைவு3. உறக்கச் சிக்கல்கள்
உறக்கம் வராமை
கொடுங்கனவுகள் வந்து வருத்துவது.

கவலையால் பீடிக்கப் படுபவர்கள் இத்தகைய அடையாளங்களைக் கொண்டு அவை தங்களுக்கு இதயவலி, புற்றுநோய் முதலான தீவிர நோய்கள் இருப்பதற்கு உறுதிகோள்கள் என்று தவறான முடிவுக்கு வந்து விடு கிறார்கள். இவ்வெண்மை கவலையை மேலும் உயர்த்தி விடும். உண்மையான ஆபத்து ஏதும் இல்லாத போதும் அளவுகடந்து மன உலைச்சலை அடையும் போதும், கவலையூட்டு பவற்றைத் தடுக்க, விலக்க உச்ச நிலை வழிமுறைகளை பின் பற்றும்போதும் கவலைக்கும் கவலைக்கோளாறுகளுக்கும் இடையே கோடு வறையறுக்கப் படுகிறது.
கவலைக் கோளாறுகளின் விளைவுகள் என்ன ?

அழுத்தமான வாழ்வியல் நிகழ்வுகள் கவலைக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் நீங்கியதும் கவலை பெரும்பாலும் தீர்ந்துவிடும். மறைந்து விடும். ஆனால் இலசமயங்களில் மன அழுத்த நிலைகள் மறைந்து போனபோதும் கவலை அறிகுறிகள் பொடு நேரம் இருக்கும்.
உங்கள் பெற்றோர்களுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ இத்தகைய நிலை இருந்தால் உங்களுக்கும் கவலைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே நீங்கள் வேலைக் கோளற்றால் அவதிபடுகிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மரபு அமைப்பு, உங்கள் வாழ்வு பட்டறிவு நிர்ணயிக்கும். சுற்றுச்சூழல் தடர் செயல்களும் இதில் முக்கிய பங்காற்றும். பெரும்பாலான சமயங்களில் கவலைக் கோளாறுகளின் உண்மையான காரணங்களைக் கூறுவது கடினமாகும். தனிப்பட்ட மலைநிலைப்போக்கு, வாழ்வின் மாற்றல்கள், சிறப்புச் சூழ்நிலைகள் போன்ற பற்றின் மன அழுத்தங்கலின் கவலையால்நோயாளி சாதாரணமாக மன உடைந்திருப்பார்.
கவலைக் கோளாறுகளை எவ்வாறு குணப்படுத்தலாம் ?

மனக்கவலை, அச்சம் கொண்டுள்ள மக்களுக்குப் பலவகைகளில் உதவ முடியும்:1.சிக்கலைப்பற்றி பேசுதல்

சில சமயங்களில் நம்பிக்கைக்குரிய நண்பன், நாம் மதிக்கும் எண்ணங்களுடைய உறவினர் இவர்களோடு பேசுவதே நம் கவலையைப் பெரிதும் குறைத்துவிடும். அவர்களுக்கும் இதே போன்ற சிக்கல், இருந்து, தமது பட்டறிவை நம்மோடு பங்கிட்டுக்கொள்ள முடியலாம். குடும்ப மருத்துவர், மனநோய் வல்லுநர், மன நிலை அறிஞர், சமூக சேவகம், மருத்துவதாதி, கருத்துரை வழங்குபவர் போன்றவர்கள் கருத்துறை வழங்கி உதவுவதைத் தொழிலாகக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களோடும் சிக்கலைப் பற்றிப் பேசி நலமுறலாம்.2.அமைதியுடன் ஒய்வெடுக்க கற்றுக்கொள்ளல்

மனதை அமைதிபட்டுத்தும் நுட்பத்தைக் கற்று கொள்வது, உங்கள் மனதைத்திசை திருப்பவும். மலை உலைச்சலையும், கவலையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொணரவும் உதவும். பிராணயாமம் போன்ற சுவாசப் பயிற்சி, தியானம், கற்பனை போன்றவை அமைதி படுத்திக் கொள்ளும் நுட்பங்கலில் அடங்கும். இத்தகைய நுட்பங்கலை நீங்களே சுற்றுக்கொள்ள உதவும் பலவகை நூல்களும், ஒலிராடடாகளும் கிடைக்கின்றன.3. மனோநிலை மருத்துவம் (Psychotherapy)

இது, உடனே, வெளிப்படையாகத் தோன்றாத கவலைக்கான காரணங்களை அடையாளங்காணவும், நன்கு புரிந்து கொள்ளவும் நோயாளிகளுக்கு உதவும் ஒரு மிகத் தீவிரமான பேச்சு மருத்துவமாகும். மருந்து களோடு இனைந்தும், தனித்தும் சில குறிப்பிட்ட அறிவாற்றல் நடந்தை (Cognitive behavioural) மருத்துவ முறைகள்.
4. மருத்துவம்

கவலைக் கோளாறுகளின் மருத்துவத்திற்குப் பலவகை மருந்துகள் கிடைக்கின்றன. மேலே குறிப்பிட்ட முறைகளோடு கலந்து, மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன. மன அமைதிபடுத்துவன்(Tranquillers), மன அழுத்தத்தைத் தடுப்பவை (antidepressents) என்பவை சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். இருவகை மருந்துகளாகும்.

மன அமைதிப்படுத்தும் மருந்துகளில் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது பெண்ஜோடயா ஜேபியன்களாகும். அவை பகல் நேர கவலை அறிகுறிகளைத் தணிப்பதற்கு மட்டுமேயன்றி இரவில் நன்கு உறக்கம் பெறவும் உதவும். அது பயன்தரக்கூடியதே என்றாலும் நெருநாட்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் நம்மை அதற்கு அடிமைபடுத்திவிடும். விளைவாக அதைப் பயன்படுத்துதலை நிறுத்திவிட்டாலோ, அல்லது மருந்தின் அளவைக் குறைத்து விட்டாலோ கவலைக் கோளாறுகளும், அவற்றின் அறிகுறிகளும் மீண்டும் தோன்றக்கூடும். எனவே பென்ஜோடயா ஜேபியன்களைக் கவலை அறிகுறிகளைப்போக்க குறுகியகாலம் பயன்படுத்த வேண்டுமே தவில, நெடுநாட்கள் கூடாது.

மன அழுத்தத்தைத் தடுக்கும் மருந்துகள், மன அழுத்த அறிகுறிகளையும், கவலைகளையும் நலப்படுத்தப் பயன்படுகின்றன. அவை, பென்ஜோடயா ஜேபியன்களைப் போல அவற்றிற்ரு அடிமைப் படுத்தாது. மன அழுத்தத் தடுப்பு மருந்துகளில் பொதுவாக பயனபடுத்தப்படும் மருந்துகள் ட்ரை சைக்ளிக் ஆண்டி டிப்ரஸண்ட்ஸ் (TCA's), செலக்டிவ் செரோடானின் ரீப்டேக் இன்ஹிபிடர்ஸ் (SSRI's) செரோடானெர்ஜிக் நொராட்ரெனர்ஜிக் ரீ-அப்டேக் இன்ஹிபிடர்ஸ் (SNRI's) மற்றும் மோனோமைன் ஆக்ஸ்டேஸ் இன்ஹிபிடர்ஸ் உள்ளடங்கும். குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தோன்றும் வரை இரண்டு முதல் நான்கு வாரங்கள் தொடர்ந்து சீராக அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
கவலைக் கோளாறுகளால் ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமா ?

கவலை கோளாறுகளுக்குப் பல பின் விளைவுகள் உள்ளன. முதல் சிக்கல் பணி செய்யும் ஆற்றல் குறைந்து விடுவதாகும். மிகவும் முதிர்ந்து உச்ச நிலையில் உள்ளவர்கள் விசயத்தில், அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பள்ளிக்கோ பணிக்கோ செல்லவே மாட்டார்கள்.
மனத் தொய்வு என்பது அடிக்கடி வரும் மற்றொரு பின் விளைவாகும். சூழ்நிலை மேன்மேலும் மோசமாகி தற்கொலை செய்து கொள்ளும் அபாயமும் அதிகரிக்கும். பொருள் தவறாகப்பயன்படுத்தப்படல் (substance abuse) என்பதும் அடிக்கடி வரும் ஒரு பின் விளைவாகும் போதைப் பொருளை தானே (ஊசிமூளம்) பயன்படுத்துதல் அல்லது மதுவுக்கு அடிமையாதல் இவற்றில் முக்கியமானவை. அத்தகு செயல்கள் தவிர்ப்பு மருத்துவத்தோடு உடனிணையாக பிற மருத்துவவும் இவர்களுக்குச் செய்யப்பட வேண்டும்.


மருத்துவத்தை நாடுவதின் முதற்படியானது, முன்பு குறிப்பிட்ட அறிகுறிகளைத் தாமே அடையாளங் காண்பதாகும். பலர் தங்களுடைய நோய் அறிகுறிகளைக் கண்டும் காணததுபோல் பொறுத்துக் கொள்வார்கள். 'பைத்தியம்' ª ன்று கருதப்பட்டு விடுவோமோ ª ன்ற அச்சத்தால், அந்த அறிகுறிகளை, சிக்கல்களைக் களைய மருத்துவ தொழில் வல்லுநர்களைச் சந்தித்துப் பேசவும் அஞ்சுவார்கள். உண்மையில் பார்க்கப் போனால் கவலை அல்லது அச்சம் உள்ள பெரும்பாலான, மக்களுக்கு மிக அரிதாகவே மனநோய் வரும். அதுமட்டுமல்ல, மருத்துவத்தால் அவர்கள் சிக்கல்கள் குறையும் அல்லது மறையும்.

நன்றி

No comments:

Post a Comment