Monday, May 6, 2013

தினம் ஒரு திருமந்திரம் 06-05-2013

பூரண சத்தி எழுமூன்று அறையாக
ஏரணி கன்னியர் எழுநூற்றுஅஞ்சு ஆயினர்
நாரணன் நான்முகன் ஆதிய ஐவர்க்கும்
காரண மாகிக் கலந்து விரிந்ததே.

பொருள் : பராசத்தியே ஏழ கன்னிகளாக இச்சை ஞானம் கிரியையாகிய பேதத்தால் இருபத்தொன்றாக அழகு மிக்க அக்கன்னியர் ஐம் பெருந் தொழிலுக்கும் நூற்றைந்து கன்னியராயினர். நாராயணன், பிரமன், உரத்திரன் , மகேஸ்வரன், சதாசிவனாகிய ஐவருக்கும் காரணமாகிய அவர்களோடு கலந்து விரிந்து நின்றனன்.

No comments:

Post a Comment