Monday, May 27, 2013

தினம் ஒரு திருமந்திரம் 27-05-2013


பணிந்துஎண் திசையும் பரமனை நாடித்
துணிந்துஎண் திசையும் தொழுதுஎம் பிரானை
அணிந்துஎண் திசையிலும் அட்டமா சித்தி
தணிந்துஎண் திசைசென்று தாபித்தவாறே.

பொருள் : மனம் ஒருமைப்பட்டு எட்டுத் திக்குகளிலும் மேலான பொருளாகிய பரமனை, அவனே பரம்பொருள் என்று ஆராய்ந்து துணிந்து, அவ்எட் டுத்திசைகளிலும் எம்பெருமானை வணங்கி, எண்திசையினும் அட்டமாசித்திகள் தாமே அடையுமாறு பெற்று எங்கும் அட்டமாசித்திகள் நிலை பெறுவித்தவாறாகும்.

No comments:

Post a Comment