Friday, July 12, 2013

தினம் ஒரு திருமந்திரம் 12-07-2013

பள்ளி அறையில் பகலே இருளில்லை
கொள்ளி அறையில் கொளுந்தாமல் காக்கலாம்
ஒள்ளிது அறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவுஇல்லை தானே.

பொருள் : இந்திரியங்கள் ஓய்வு பெறுகின்ற பள்ளி அறை என்ற பரஅவத்தையில் (பரை நிலையில்) ஒளியேயன்றி இருளில்லை ஒளியேயுள்ள அறையான படியால் வேறு அக்கினி கொளுத்தாமல் காக்கலாம். ஒளியை உடையதாகிய இந்நிலையை அறியில் இது தியானத்தில் எய்தப் பெறுவது ஆகும். இருளே இல்லாதபடியால் விடிவே இல்லை. (பள்ளி அறை - உள்ளம் கொள்ளி அறை - சுடுகாடு எனினும் ஆம்)

No comments:

Post a Comment