Saturday, July 20, 2013

தினம் ஒரு திருமந்திரம் 20-07-2013


மூலத்து மேலது முச்சது ரத்தது
கால் அத்து இசையில் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே

பொருள் : குண்டலினி நான்கு இதழ்களோடு கூடிய மூலாதாரத்திலுள்ள முக்கோணவடிவமானது. அது அபானன் சத்திகெட்டுப் பிராணனோடு சேர்கின்ற இடத்தில் பெருமைமிக்க அர்த்த சந்திரனில் நெற்றிக்கு நடுவேயுள்ள வடிவத்தில் அர்த்தசந்திரன் முதல் உன்மனி ஈறாகவுள்ள கலைகளாக விளங்கும்.

No comments:

Post a Comment