Wednesday, July 24, 2013

தினம் ஒரு திருமந்திரம் 24-07-2013


நாடும் பிணியாகும் நம்சனம் சூழ்ந்தக்கால்
நீடும் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடுஒன்றி னால்வாயாச் சித்தியே தத்தின்
நீடும் துரம்கேட்டல் நீண்முடிவு ஈராறே.

பொருள் : நம்முடைய உறவினர் சூழ இருப்பின் நம்மை நாடுவது பந்தமாகும். மிக்க கலை ஞானம், நுண்ணறிவு, நிறையறிவு ஆகிய இவற்றால் அட்டமாசித்திகள் அடையா. பேதமாகப் பெருகிய ஒலியினைப் பன்னிரண்டு கேட்டாலே சித்தியைத் தருமாம். (நீண்முடிவுஈராறு - யோகாப்பியாச காலம் பன்னிரண்டு வருடங்கள்.)

No comments:

Post a Comment