Monday, April 2, 2012

தினம் ஒரு திருமந்திரம் (02-04)

வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத்து இரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்டும்
ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

பொருள் : இடைகலை வழியாகப் பதினாறு மாதிரை பூரகம் செய்து, விரும்பத்தக்க பிங்கலையின்கண் பாதுகாப்புற்ற முப்பத்து இரண்டு மாத்திரை இரேசகம் செய்து, பூரித்தலும் இரேசித்தலுமாகிய வேள்வியால் அறுபத்துநான்கு மாத்திரை சூம்பகம் செய்ய உண்மை விளையும்

No comments:

Post a Comment