Tuesday, April 3, 2012

தினம் ஒரு திருமந்திரம் (03-04)


இட்டது அவ்வீடு இளகாது இரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்து
கொட்டிப் பிராணன் அபானனும் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

பொருள் : ஆக்கப்பட்டதாகிய இவ்வுடம்பு தளர்ச்சியடையாமல் இரேசகம் செய்து, பத்து நாடிகளும் விம்முமாறு காற்றினை உள்ளே இழுந்து நிரப்பி, பிராணனும் அபானனும் சேரப்பெற்று நேராக நிமிர்ந்திருக்க எம பயம் இல்லையாம். (நட்டம் இருக்க - நிலை நிறுத்த எனினுமாம்)

No comments:

Post a Comment