Thursday, April 5, 2012

தினம் ஒரு திருமந்திரம் (05-04)


 கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளின்கோல அஞ்செழுத்து ஆமே.

பொருள் : உடம்பை இடமாகக் கொண்ட பிராண சத்தி, குழந்தையாக இருந்தபோது பன்னிரண்டு விரற்கடை நீளம் சென்றும் புகுந்தும் இருந்தனர். வயதான போது தொண்டைக்கு மேலே சிரசில் செல்லும் நான்கு விரற்கடையைத் துண்டித்துவிட்டு எட்டு விரற்கடை அளவே தொழிற்படுகின்றனர். மேலே தடை செய்யப்பட்ட நான்கு விரற்கடையும் தொழிற்படுமாறு செய்துகொண்டால் சாதகர் பஞ்சாக்கர சொரூபமாவர்.

No comments:

Post a Comment