Saturday, April 7, 2012

தினம் ஒரு திருமந்திரம் (07-04)


பிரத்தியாகாரம்
(புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே பிரத்தியாகாரமாம். இது அடயோகம், இலயயோகம், இலம்பிகாயோகம், மந்திரயோகம், இராஜ யோகம், சிவயோகம் என்ற பிரிவுகளுக்கு ஏற்ப வேறுபடும் அட்டாங்கயோகத்தில், இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் என்பன பூர்வபட்சம் என்றும், பிரத்தியாகாரம் தாரணை, தியானம், சமாதி என்பன உத்தரபட்சம் என்றும் கொள்ள வேண்டும். பூர்வம் முன்நிகழ்வது; உத்தரம்-பின் நிகழ்வது.)

கண்டுகண்டு கருத்துற வாங்கிடின்
கொண்டு கொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.

பொருள் : புறத்தே சென்று ஓடுகின்ற மனத்தை அகத்தே பொருந்துமாறு செய்துவிடின், அக்காட்சியைக் கொண்டு சிறிது சிறிதாக  இருள் நீங்கி ஒளி பெறலாம். முன்பு விரும்பி எங்கும் பழைய வேதங்களால் தேடப்பெற்ற பொருளை எடுத்த இவ்வுடலில் அகத்தே கண்டு இருத்தல் கூடும்.

No comments:

Post a Comment