Wednesday, April 11, 2012

தினம் ஒரு திருமந்திரம் (11-04)

நாசிக்கு அதோமுகம்  பன்னிரண்டு அங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மா யோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக்கு என்றும் சிதைவில்லை யாகுமே.


பொருள் : நாசிக்குக் கீழ் பன்னிரண்டு அங்குல அளவிலுள்ள இதயத்து நீ மனத்தை இழுத்து வைத்துச் செஞ்சுடரை நினைப்பாய் ஆயின் அட்டமா சித்திகளும் ராஜயோகமும் வந்து கூடும். இத்தியானம் தேகத்துக்கு எப்பொழுதும் தீமை செய்யாததாகும். இதை அநாகதம் என்பர். (அகவழிபாடு - மானத பூசை.)

No comments:

Post a Comment