Thursday, April 5, 2012

பொய் தவசி பற்றி காக புஜண்டர்



சித்தர்கள் பொதுவாக பொய் வேடமிட்டு திரியும்
மாக்களை நன்றாக வசை பாடுவார்கள் .இந்த
உலகில் உயிர் வாழ வேண்டும் அதற்க்கு அன்னம் வேண்டும்.அன்னத்திற்கு வேண்டி ஒருவன்
தவசியானால் அவன் நிலையைப்பற்றி.

பாடல்:

சோறுக்கோ  அறுசுவைக்கோ துணிக்கித் தானோ
சுகம்வேண்டி யிவ்வளவுங் கையையேந்தி
நீருக்கோ ஓடேந்தி வாசல்நின்று
நிமிர்ந்தாக்கால் நீரிடார் தலைகவிழ்ந்தே

பாருக்கோ பாதமதைப் பார்த்தேநின்று
பரிவாசி காணாமற் கூசிநின்று
மோருக்கோ நின்றிரு ப்பீர் வாசல்தோறும்
மொய்குழலா ரிட்டஅன்னம் வீடுதானே ....

விளக்கம் :
பொதுவாக பிச்சை எடுப்பது சாதாரண விஷயம்
இல்லை. பலரின் கேலிப் பேச்சுக்களிற்கு இடையில்
தான் வாழ முடியும்இப்படி பட்ட வாழ்க்கை நமக்கு
தேவையா ? தேவை என்றால் அதை அனுபவித்து
வாழ வேண்டும்.எல்லா சித்தர்களும் திருமணம்
புரிந்து கொண்டு இல்லறத்தில் இருந்து கொண்டு
துறவறத்தை மேற்கொண்டவர்கள்
எமது குரு முனியும் கூட தான்.
யாரும் இதற்கு விதி விலக்கல்ல. பிச்சை
எடுத்தவர்களில் பல சித்தர்களுண்டு ஏன் அந்த
ஆதி சித்தனும் உண்டு.

அன்னமய கோசத்திற்கு தான் அன்னம் தேவை
ஆனந்தமய கோசத்திற்கு இல்லை . மேற்கண்ட
பாடல் அருமையான விளக்கத்தோடு உள்ளது.பிச்சை
எடுப்பதும் அதில் கிடைத்தால் சந்தோசம் இல்லை
யென்றால் தலை கவிழ்ந்து அசிங்கம் ஏற்படும் போன்ற
கருத்துகள் உள்ளது.

வாசியைப்பார்த்து வந்தால் அன்னம் தேவை இல்லை ,
ஆனந்தம் அங்கு தாண்டவமாடும் . உயிருக்கும்
உடலுக்கும் தேவையான அனைத்து சத்துகளும்
வாசியின் மூலம் பெறமுடியும்.

"வாசியை கவனித்தால் காசி போக தேவையில்லை"
வாசியை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
குருவருளால்.


No comments:

Post a Comment