Wednesday, April 4, 2012

தினம் ஒரு திருமந்திரம் (04-04)


புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

பொருள் : உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்குத்திரிகின்ற வாயுவை முறையான கும்பகத்தினாலே உள்ளே தூய்மை செய்தால் உறுப்புக்களில் இரத்த ஓட்டம் பாய்ந்து சிவந்து நிற்கும். தலைமுடி, மயிர்கறுத்து விளங்கும். கிரணங்களால் சூழப்பெற்ற ஆத்மன் உடலில் நிலைபெற்று நிற்பான், உடலும் அழியாது என்றபடி.

No comments:

Post a Comment