Tuesday, April 10, 2012

தினம் ஒரு திருமந்திரம் (10-04)


மூலத்து இருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்எழும் செஞ்சுடர்
ஞாத்து நாபிக்கு நால்விரல் கீழதே.

பொருள் : மூலதாரத்துக்கு இருவிரல் அளவு மேலுள்ளதும் முன்பக்கம் பார்வையுடையதும் வெளிப்படுத்தும் தன்மையுடைய குறிக்கு இரண்டு விரல் அளவு கீழே உள்ளதுமான இடத்தில் வட்டமிட்டுக் கொண்டுள்ள குண்டலினியுள் எழுகின்ற செஞ்சுடர், உடம்பில் உந்திக் கமலத்துக்கு நான்கு விரல் அளவு கீழே யுள்ளது. (செஞ்சுடர் - உச்சித்துளைவழி, பிரமரந்தி மார்க்கம்)

No comments:

Post a Comment