Saturday, March 17, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 17/03/2012


          புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
          கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும்
          துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
          உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே

பொருள் : பறவையை விட வேகத்துடன் கூடிய பிராணனின் வழி சிரசை நோக்கிச் சென்றால் கள்ளுண்ணாமலேயே மகிழ்ச்சியுண்டாகும். உடலில் சோர்வு நீங்கும். சுறுசுறுப்புடனும் இருக்கும். பிராணனும் மனமும் சிரசில் பாயும் மனமுடையோர்க்கு இவ்வுண்மையைச் சொன்னோம். (புரவி - பிராணவாயு.)

No comments:

Post a Comment