Wednesday, March 28, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 28/03/2012


                      ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
                     ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
                     ஊறுதல் முப்பத்து இரண்டது ரோசகம்
                     மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.

பொருள் : பதினாறு மாத்திரை காலஅளவு இடப்பக்கமுள்ள நாசித் துவாரத்தில் காற்றை உள்ளுக்கு இழுத்தால் பூரகமாம். அறுபத்து நான்கு மாத்திரை அளவு இழுத்த காற்றை உள்ளே நிறுத்தல் கும்பகமாம் முப்பத்திரண்டு மாத்திரை கால அளவு வலப்பக்கம் நாசித்துவாரத்தில் காற்றை மெல்லன விடுதல் ரேசகமாம். முன்னே சொல்லிய முறைக்கு மாறாக வலப்பக்கம் நாசித் துவாரத்தில் காற்றை இழுத்து நிறுத்தி இடப்பக்கம் நாசித் துவாரத்தில் விடுதல் வஞ்சனையாம்.

No comments:

Post a Comment