Thursday, March 15, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 15/03/2012


பிராணாயாமம்

(பிரணாயாமமாவது பிராணனைக் கட்டுப்படுத்தல். மேலே கூறிய ஆசனவகையில் ஏதாவது ஒன்றில் இருந்து பிராணாயமப் பயிற்சி செய்யவேண்டும். பிராணாயாமம் ஆசனம் போன்று பல்வேறு வகைத்து)


              ஐவர்க்கு நாயகன் ஆவ்வூர்த் தலைமகன்
              உய்யக் கொண்டேறும் குதிரைமற்று ஒன்றுண்டு
              மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய்ப்
              பொய்யரைத் துள்ளி விழுந்திடும் தானே.

பொருள் : ஐம்பொறிகளுக்கு நாயகனும் அவ்உடம்புக்குத் தலைவனுமாகிய ஆன்மா, உய்திபெற்று மேல் செல்லுவதற்கு மனத்தோடு பிராணனாகிய குதிரை ஒன்றுள்ளது. அது தேகத்தை விட்டு அகண்டத்தைப் பற்றி நின்றோர்க்கு வசப்பட்டு நிற்கும். மெய்யுணர்வில்லாது கண்டத்தைப்பற்றி நின்றோர்க்குப் பிராணன் வசப்படாமல் கீழே தள்ளிவிடும் (குதிரை - பிராணவாயு)

No comments:

Post a Comment