Tuesday, March 27, 2012

தினம் ஒரு திருமந்திரம்- 27/03/2012


                   பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
                   பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை
                   பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
                   பிராணன் நடைபேறு பெற்றுண்டீர் நீரே

பொருள் : நாமரூப பேதமான பிரபஞ்சத்தை எண்ணாதவற்கு மனமும் பிராணனும் அடங்கி, பிராணன் ஒடுங்கின் பிறப்பு இறப்பு இல்லை. சிவன் தனி வியக்தியில் வைகி வாக்கு உதித்துப் பிராணனும் நிலை மாறி, பிராணன் ஒடுங்காத போது பிறப்பு இறப்பில் படுவீர்.

No comments:

Post a Comment