Saturday, March 31, 2012

தினம் ஒரு திருமந்திரம் - 31/03/2012


              மேல்கீழ் நடுப்பக்கம் மிக்குறப் பூரித்துப்
              பாலாம் இரேசகத் தால்உட் பதிவித்து
              மாலாகி உந்தியுள் கும்பித்து வாங்கலே
             ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.

பொருள் : முறையான காற்று தொண்டை மூலாதாரம், விலா ஆகியவற்றில் நிரம்பும்படி செய்து, மறு பகுதியான இரசேகத்தால் (விடுதலால்) அவயவங்களை ஒன்றோடு ஒன்று பதியும்படி செய்து, விருப்பத்தோடு வயிற்றில் கும்பகம் செய்து இருக்கவே நீலகண்டப் பெருமான் அருளைப் பெறலாகும்.

No comments:

Post a Comment